|
||||||||
வடைகறி (vadai curry) |
||||||||
தேவையானவை: கடலைப் பருப்பு - 1/4 கிலோ வெங்காயம் - 5 தக்காளி - 2 ப மிளகாய் - 3 எண்ணெய் - அரை லிட்டர் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் உப்பு - சிறிது மிளகாய் தூள் - அரை டீஸ்பூன் பூண்டு - 10 இஞ்சி - சிறு துண்டு கடுகு-சிறிது, சோம்பு-சிறிது, பட்டை-சிறிது, லவங்கம்-சிறிது, ஏலக்காய்-சிறிது, கறிவேப்பிலை-சிறிது, செய்முறை: 1.காலையில் கடலைப் பருப்பை 5 பூண்டு, இஞ்சி, சிறிது உப்பு வைத்து கெட்டியாக அரைக்கவும். 2.கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு அரை வேக்காடாக எடுக்கவும். ஆறியதும் கைப் போட்டு உருண்டைகளை உடைத்து வைக்கவும். 3.மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதை எல்லாம் போட்டு தாளிக்கவும். 4.வெங்காயம், ப மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, உதிர்த்த கடலை உருண்டைகளையும், தக்காளியையும் போட்டு கிளறவும். 5.இறுதியாக சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். 6.தண்ணீர் சுண்டி தொக்கு பதத்திற்கு வரும்போது இறக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|