பைலின் புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தின் கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வங்கக் கடலில் மையம் கொண்ட பைலின் புயல், மேலும் தீவிரம் அடைந்து ஒடிசா, ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே பாரதீப் துறைமுகத்திற்கு தென் கிழக்கே 500 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அது வடமேற்கு திசையிலிருந்து நகர்ந்து ஆந்திர மாநிலத்தின் வடக்கே ஒடிசா கடலோர பகுதியான கோபால்பூருக்கு அருகே நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு சுமார் 250 முதல் 260 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் இரு மாநிலங்களிலும் கடலோர மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆந்திராவில் சுமார் 64,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ஒடிசாவிலும் இதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பைலின் புயல் கரையை கடக்கும் போது அதிவேக புயலாக மாறி பெரும் சேதத்தை உண்டு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முப்படையை சேர்ந்த வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
|