ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டு, திறப்பு விழா காணாத சேமிப்பு கிடங்கு, கஜா புயலில் கடும் சேதம் அடைந்தது.
நாகை மாவட்டம் வேட்டைகாரனிருப்பு கோயில்பத்து என்ற இடத்தில் 243 ஏக்கரில் ரூ.450 கோடி செலவில் 1.50 லட்சம் டன் நெல், அரிசி உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைக்கும் அளவில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் 23 சேமிப்பு கிடங்குகளை கட்டியது.
இந்த இடத்தை கடற்படை தங்களுக்கு வேண்டும் என்று கோரியதால் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் ஓர் ஆண்டாக திறப்பு விழா காணாமல் பூட்டியே வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 15ம் தேதி வீசிய கஜா புயலில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இரும்பு தகரத்தால் வேயப்பட்ட கட்டிடத்தின் மேற்கூரை முழுவதும் காற்றில் அடித்து செல்லப்பட்டது. அங்கு கட்டப்பட்ட 23 சேமிப்பு கிடங்குகளும் முழுமையாக சேதம் அடைந்து உள்ளது.
|