|
||||||||
டேட்டிங் என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன தெரியுமா ? |
||||||||
டேட்டிங் என்பதற்குத் தமிழ் வார்த்தை தேவைப்படுகிறது என்று நண்பரின் பதிவொன்று காணப்பட்டது. அதற்கு நான் ‘களவளாவல்’ என்ற சொல்லை முன்மொழிந்தேன். அந்தப் புதுத்தொடரில் உள்ள களவு என்ற வார்த்தை ‘திருட்டு அல்லது தவறான நடத்தை’ சார்ந்த அவப்பொருள் தருகிறதோ என்று சிலர்க்குத் தயக்கம். டேட்டிங் என்பது ஆணும் பெண்ணும் கலந்து பழகி அறிகின்ற இளம்பருவச் செயல். அச்செயலைக் குற்றமாகவோ தீதாகவோ பொருளுணர்த்தாதபடி தமிழ்ச்சொல் அமையவேண்டும்.
இதில் களவு என்பது என்னவென்று நான் விளக்கவேண்டியிருக்கிறது. களவு என்பதைத் திருட்டு என்ற பொருளில் புரிந்துகொள்ளவேண்டியதில்லை. காதல் வாழ்க்கையைக் களவு, கற்பு என்று இருவகையாய் வகுப்பர் தமிழர். இங்கே களவு என்பது பிறர் அறியாத நடத்தை. அதைக் களவொழுக்கம் என்பர்.
களவொழுக்கம் கற்பொழுக்கம் இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் அடுக்கி அமைத்ததிலிருந்தே இரண்டின் முக்கியத்துவத்தையும் உணரலாம். களவில் தலைவனும் தலைவியும் தம்மை ஊரார் அறியும்முன் சந்தித்துப் பழகுவர். உறவும் இருக்கலாம். அளாவுதல் என்பதற்குக் ‘கலத்தல், சென்று பொருந்துதல், கலந்து பேசுதல்’ ஆகியன பொருள்கள். களவு + அளாவல் = களவளாவல்.
நான் ஆயிரம் முறைகள் சொல்லிவிட்டேன் - ‘தமிழில் ஒருசொல்லுக்குப் பல பொருள்கள்... ஒரு பொருளுக்குப் பல சொற்கள். அதனால் களவளாவல் என்கிறேன்.
கிராமப்புறத்தில் ஒருவனைக் களவாணி என்பார்கள். ‘அவன் சரியான களவாணிப் பயலாச்சே...’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார்கள். இங்கே என்ன அர்த்தம் ? அவன் வீடுகள்தோறும் திருடியவனா ? அப்படித் திருடியிருந்தால் அவனைக் கட்டிவைத்து அடிக்கமாட்டார்களா ? திருடனாயிருந்தால் எடுத்த எடுப்பில் ‘திருடன் சார்... அவன் அயோக்கியப் பயலாச்சே...’ என்பார்கள். ஆனால் இவர்கள் சிரித்துக்கொண்டே கூறும் களவாணியில் அந்த அர்த்தம் இல்லை. அவன் நிறைய மறைபொருள்கள் உடையவன். யார்க்கும் தெரியாமல் எதையாவதொன்றைச் செய்கின்றவன். அது அவனுடைய களவு நடத்தை. அதனால்தான் அவன் களவாணி.
தமிழ்சார்ந்தோ இலக்கணம்சார்ந்தோ எதையும் எழுதுவதற்குமுன் பன்முறை சிந்திக்கிறேன். ஒன்றுக்குப் பத்துக் கணினிச் சாளரங்களைத் திறந்து தரவுகளைச் சரிபார்க்கிறேன். என்னைச்சுற்றிலும் இலக்கணப் பெருநூல்களும் அகராதிகளும் கண்டபடி இறைந்துகிடக்கின்றன. நான் அலைபேசியில் முகநூல் திறப்பதில்லை. அங்கங்கே கிடைக்கும் இடைவெளியில் எழுதுவதில்லை. தம்முன் உள்ள அத்தனை கட்டுப்பாடுகளும் கருவிகளும் உதவுவதால் ஒருவர் எத்தனை நம்பிக்கையுடன் விமானத்தை இயக்குகிறாரோ, அந்த நிலைமையில்தான் நான் மொழிசார்ந்து எழுதுகிறேன். ஐயம் தோன்றியவுடன் என் பெயரைக் கோத்துவிடுகிறார்கள். அந்த அறிவிப்பைக் கண்ணுற்று உரிய உழைப்பைச் செலவிட்டுத்தான் என் பதிலைச் சொல்கிறேன். ஏனோதானோ நிலைமை என்றால் ஐந்தாறு நாள்களுக்குக்கூட ஒன்றும் எழுதாமல் அமைதி காப்பானேயன்றி இங்கே வெற்று வரிகள் ஒன்றுகூட எழுதப்படமாட்டாது !
- கவிஞர் மகுடேசுவரன்
டேட்டிங் என்பதற்குத் தமிழ் வார்த்தை தேவைப்படுகிறது என்று நண்பரின் பதிவொன்று காணப்பட்டது. அதற்கு நான் ‘களவளாவல்’ என்ற சொல்லை முன்மொழிந்தேன். அந்தப் புதுத்தொடரில் உள்ள களவு என்ற வார்த்தை ‘திருட்டு அல்லது தவறான நடத்தை’ சார்ந்த அவப்பொருள் தருகிறதோ என்று சிலர்க்குத் தயக்கம். டேட்டிங் என்பது ஆணும் பெண்ணும் கலந்து பழகி அறிகின்ற இளம்பருவச் செயல். அச்செயலைக் குற்றமாகவோ தீதாகவோ பொருளுணர்த்தாதபடி தமிழ்ச்சொல் அமையவேண்டும். இதில் களவு என்பது என்னவென்று நான் விளக்கவேண்டியிருக்கிறது. களவு என்பதைத் திருட்டு என்ற பொருளில் புரிந்துகொள்ளவேண்டியதில்லை. காதல் வாழ்க்கையைக் களவு, கற்பு என்று இருவகையாய் வகுப்பர் தமிழர். இங்கே களவு என்பது பிறர் அறியாத நடத்தை. அதைக் களவொழுக்கம் என்பர். களவொழுக்கம் கற்பொழுக்கம் இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் அடுக்கி அமைத்ததிலிருந்தே இரண்டின் முக்கியத்துவத்தையும் உணரலாம். களவில் தலைவனும் தலைவியும் தம்மை ஊரார் அறியும்முன் சந்தித்துப் பழகுவர். உறவும் இருக்கலாம். அளாவுதல் என்பதற்குக் ‘கலத்தல், சென்று பொருந்துதல், கலந்து பேசுதல்’ ஆகியன பொருள்கள். களவு + அளாவல் = களவளாவல். நான் ஆயிரம் முறைகள் சொல்லிவிட்டேன் - ‘தமிழில் ஒருசொல்லுக்குப் பல பொருள்கள்... ஒரு பொருளுக்குப் பல சொற்கள். அதனால் களவளாவல் என்கிறேன். கிராமப்புறத்தில் ஒருவனைக் களவாணி என்பார்கள். ‘அவன் சரியான களவாணிப் பயலாச்சே...’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார்கள். இங்கே என்ன அர்த்தம் ? அவன் வீடுகள்தோறும் திருடியவனா ? அப்படித் திருடியிருந்தால் அவனைக் கட்டிவைத்து அடிக்கமாட்டார்களா ? திருடனாயிருந்தால் எடுத்த எடுப்பில் ‘திருடன் சார்... அவன் அயோக்கியப் பயலாச்சே...’ என்பார்கள். ஆனால் இவர்கள் சிரித்துக்கொண்டே கூறும் களவாணியில் அந்த அர்த்தம் இல்லை. அவன் நிறைய மறைபொருள்கள் உடையவன். யார்க்கும் தெரியாமல் எதையாவதொன்றைச் செய்கின்றவன். அது அவனுடைய களவு நடத்தை. அதனால்தான் அவன் களவாணி. - கவிஞர் மகுடேசுவரன்
|
||||||||
by Swathi on 26 Nov 2014 2 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|