அரியானாவில், மருத்துவர்களால் இறந்து விட்டதாக கூறிய, பச்சிளம் குழந்தை, புதைக்கும் நேரத்தில் குழந்தையில் உடல் அசைந்ததால், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியானா மாநிலத்தில் உள்ள பால்சமந்த் கிராமத்தை சேர்ந்தவர் சத்பால். இவரது மனைவி, பூஜா, கடந்த சில தினங்களுக்கு முன், இவர் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்தது முதல், ஆரோக்கியமாக இருந்தது, இந்நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.குழந்தை பிறந்த போது, தாயின் வயிற்றில் இருந்த நீரை அதிக அளவில் குடித்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில மணிநேர சிகிச்சைக்குப் பின், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையும், அசைவின்றி கிடந்ததால், சோகத்தில் மூழ்கிய உறவினர்கள், குழந்தையில் இறுதி சடங்கிற்கான பணிகளை செய்ய ஆரம்பித்தனர், அதன்படி, தாய் பூஜாவின் சேலையில் குழந்தையை படுக்க வைத்து, இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். குழந்தையை புதைக்க குழியும் தோண்டினர். புதைக்கும் நேரத்தில், சேலையில் திடீரென அசைவு காணப்பட்டதால், அழுது கொண்டிருந்த பூஜா, குழந்தையை சேலையில் இருந்து எடுத்துப் பார்த்தார். அப்போது, மருத்துவர்களால் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட குழந்தை, வாயில் விரல் வைத்து சிரித்துக் கொண்டே, அசைந்தது. மகிழ்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர்கள், உடனடியாக குழந்தையை வீடிற்கு எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி, குழந்தைக்கு, ராஜ்துலாரி எனப் பெயரிட்டுள்ளனர்.
|