LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அரியானாவில் இறந்த குழந்தை பிழைத்த அதிசயம் !!

அரியானாவில், மருத்துவர்களால் இறந்து விட்டதாக கூறிய, பச்சிளம் குழந்தை, புதைக்கும் நேரத்தில் குழந்தையில் உடல் அசைந்ததால், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

அரியானா மாநிலத்தில் உள்ள பால்சமந்த் கிராமத்தை சேர்ந்தவர் சத்பால். இவரது மனைவி, பூஜா, கடந்த சில தினங்களுக்கு முன், இவர் அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்தது முதல், ஆரோக்கியமாக இருந்தது, இந்நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.குழந்தை பிறந்த போது, தாயின் வயிற்றில் இருந்த நீரை அதிக அளவில் குடித்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில மணிநேர சிகிச்சைக்குப் பின், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையும், அசைவின்றி கிடந்ததால், சோகத்தில் மூழ்கிய உறவினர்கள், குழந்தையில் இறுதி சடங்கிற்கான பணிகளை செய்ய ஆரம்பித்தனர், அதன்படி, தாய் பூஜாவின் சேலையில் குழந்தையை படுக்க வைத்து, இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். குழந்தையை புதைக்க குழியும் தோண்டினர். புதைக்கும் நேரத்தில், சேலையில் திடீரென அசைவு காணப்பட்டதால், அழுது கொண்டிருந்த பூஜா, குழந்தையை சேலையில் இருந்து எடுத்துப் பார்த்தார். அப்போது, மருத்துவர்களால் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட குழந்தை, வாயில் விரல் வைத்து சிரித்துக் கொண்டே, அசைந்தது. மகிழ்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர்கள், உடனடியாக குழந்தையை வீடிற்கு எடுத்து சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி, குழந்தைக்கு, ராஜ்துலாரி எனப் பெயரிட்டுள்ளனர்.

by Swathi   on 05 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.