|
|||||
2 ஜி விவகாரம் : கத்தி படத்திற்கு புதிய சிக்கல் !! |
|||||
பல வழக்குகளையும், பிரச்சனைகளையும் தாண்டி கடந்த தீபாவளி அன்று வெளியான கத்தி திரைப்படம் இன்று வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது கத்தி திரைப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அந்த சிக்கல் என்னவென்றால், கத்தி படத்தில், விஜய் ஒரு காட்சியில் 2ஜி ஊழல் தொடர்பான வசனத்தை பயன்படுத்தியிருப்பதால், அதனை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் பின்வருமாறு, இந்த வழக்கு தொடர்பாக நாகமலைப்புதுக்கோட்டை சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் மதுரை ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கத்தி திரைப்படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் போது, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நிலுவையில் உள்ள, 2ஜி வழக்கு குறித்த வசனம் இடம் பெற்றிருந்தது. " 2ஜி என்றால் என்னன்னு தெரியுமா...? வெறும் காற்றை வைத்து கொள்ளையடித்தவர்கள் இருக்கும் ஊரு இது என்ற வசனம், இந்த நாட்டையும், நாட்டை ஆட்சி செய்தவர்களையும் கேவலமாக சித்தரித்துள்ளது. கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கை அரசியல் ஆதாயத்திற்காக, பல கோடி மக்கள் பார்க்கும் சினிமாவில் விஜய் யன்படுத்தியுள்ளார். 2ஜி வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப் படாத நிலையில், அதை குற்றமாக சித்தரித்து கோர்ட்டை அவமதித்து உள்ளனர். இந்தியாவை ஊழல் நாடாக சித்தரித்து, அன்னிய நாடுகள் உயர் தொழில்நுட்பத்தை, இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கும் சூழலை உருவாக்கியுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு, 500ன் படி நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், லைக்கா நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார். . இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு மீதான விசாரணையை, அடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர். |
|||||
by Swathi on 28 Oct 2014 0 Comments | |||||
Tags: 2 G Dialogue 2 ஜி வசனம் கத்தி கத்தி விஜய் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|