மத்திய அரசு சி.டி.எம்.ஏ தொழில் நுட்பத்திற்கான ஏலத்தொகையில் 50% குறைக்கப்பட்ட பிறகு, அதற்கான ஏலம் நடத்தியது. இதில் ரஷ்யாவைச் சேர்ந்த, சிஸ்டெமா எஸ்.எஸ்.எஸ்.டி.எல்., எனும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே, கலந்து கொண்டது. 3,639 கோடிரூபாய்க்கு ஏலம் எடுத்தாகத் தெரியவந்துள்ளது. மேலும், மும்பை, மகாராஷ்டிரா மற்றும் உ.பி.,யின் கிழக்கு பகுதி ஆகிய மண்டலங்களுக்கு, எந்த நிறுவனமுமே ஏலம் கேட்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஆகக் குறைவான தொகைக்கே ஏலம் போயுள்ளதால் அலைபேசிக் கட்டணங்களில் மாற்றங்கள் வருமா?
|