|
||||||||
டெலவரில் தமிழக விவசாயிகளுக்கான ஆதரவுப் போராட்டம்.. |
||||||||
மார்ச் 19: டெலவரில் தமிழக விவசாயிகளுக்கான ஆதரவுப் போராட்டம் டெல்லியில் தமிழக விவசாயிகள் குளிரிலும், பனியிலும் மண்டையோடு ஏந்தி, அரை நிர்வாணமாய், சாலைகளில் படுத்து இன்னும் பல வழிகளில் தொடர் போராட்டம் நடத்தினார்கள்! ஆனால் மத்திய, மாநில அரசுகள் அவர்களைக் கவனிக்கவே இல்லை! அவர்களைத் தவிர வேறுயாரும் அவர்களுடன் களத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் படுப்பதற்கு இடமில்லாமல் சீக்கியர்களின் குருத்துவாராவில் தூங்குவதாகவும், உணவிற்கு சரியான வழியின்றி இருப்பதாகவும் செய்திகளின் மூலமாகத் தெரிந்தது. அவர்கள் படும் இன்னல்களைப் பார்க்கும் போது சோகமும், கோபமும், இயலாமையும் மனதை வாட்டியது! அதனால் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவர் மாநிலத்தில் தமிழ் நண்பர்களால் மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4:00 மணிக்கு வில்மிங்டன் நகரில் உள்ள ரிவர் ஃப்ரன்டில்(Chase Center on the Riverfront)ஒரு ஆதரவுப் போராட்டம் நடத்தப்பட்டது. குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் பெருமளவில் டெலவர் தமிழ் நண்பர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு மறுநாள் திங்களன்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியுள்ளார்கள். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, சாதகமான முடிவு வரும் வரை டெல்லியிலேயே தங்குவதாக முடிவு செய்துள்ளார்கள். உழவர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு ஏற்படாமல் டெல்லியில் போராட்டம் தொடரும் பட்சத்தில், இன்று டெலவரில் நடைபெற்ற இந்தப் போராட்டம் ஒரு முன்னுதாரனமாய் அமைந்து, அமெரிக்காவின் பிற பகுதியிலுள்ள தமிழர்களையும் அவர்கள் இருக்கும் நகரங்களில் ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுக்கத் தூண்டுகோலாய் அமையும் என்று நம்புவோம். வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம்!
To wach the videos: -ரமா ஆறுமுகம் |
||||||||
by Swathi on 22 Mar 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|