|
|||||
டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு : 4 பேருக்கும் தூக்கு !!! |
|||||
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பிற்பகல் 2.30 விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 பேரும் குற்றம் புரிந்தவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இவர்களுக்கு தூக்குத்தண்டனையை வழங்குவதாகவும் நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற தண்டனை குறித்த விவாதத்தின் போது, குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும்படி நீதிபதியிடம் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
குற்றவாளிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி வாதிட்டார். டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி , ஓடும் பேருந்தில், ஆறு பேர் கொண்ட கும்பலால், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதில், படுகாயம் அடைந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவ மனையில் உயிரிழ்ந்தார்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரில், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். எஞ்சிய நான்கு பேருக்கும் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரசின் அழுத்தம் காரணமாக குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார். |
|||||
by Swathi on 13 Sep 2013 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|