டில்லியில் கடந்த 16-ம் தேதி ஓடும் பஸ்ஸில் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி இன்று காலை உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.அவரது மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள்,பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 16 ல் நடந்த கொடூரம் :
டிசம்பர் 16 ஞாயிற்று கிழமை இரவு 9.30 மணி இந்தியாவில் பாதுகாப்பு மிகுந்த தலைநகரமான டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்டார். கூடி இருந்தவர்கள் அவரை மீட்டு டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெண்கள் அமைப்பினர் போராட்டம் :
மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.இதனால் கடந்த 12 நாட்களுக்கு மேலாக மகளிர் அமைப்பினர், மாணவ, மாணவியர்கள் , சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டத்தை இந்தியா முழுவதும் மேற்கொண்டனர். இதன் காராணமாக பாலியல் கொடுமையில் ஈடுபட்ட அந்த ஆறு காம கொடுரன்களை போலீசார் விரைவில் கைது செய்தனர்.மேலும் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க அனைத்து தரப்பினரும் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, மத்திய அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது.
மேல்சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு பயணம் :
கடந்த 10 நாட்களாக டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி மேல் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் சிங்கபூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் இம்மன்னுலகை விட்டு பிரிந்தது.
தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு :
மருத்துவ மாணவி இறந்ததை அடுத்து மாணவர்கள் வன்முறையில் இறங்குவதை தடுக்க டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இறந்த மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்கு பிறகு இந்தியா கொண்டுவர இந்திய தூதரகத்தினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
|