LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மண்ணுலகை விட்டு பிரிந்தார் மருத்துவ மாணவி !

டில்லியில் கடந்த 16-ம் தேதி ஓடும் பஸ்ஸில் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி இன்று காலை உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச‌ை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.அவரது மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள்,பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 16 ல் நடந்த கொடூரம் :

டிசம்பர் 16 ஞாயிற்று கிழமை இரவு 9.30 மணி இந்தியாவில் பாதுகாப்பு மிகுந்த தலைநகரமான டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்டார். கூடி இருந்தவர்கள் அவரை மீட்டு டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெண்கள் அமைப்பினர் போராட்டம் :

மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.இதனால் கடந்த 12 நாட்களுக்கு மேலாக மகளிர் அமைப்பினர், மாணவ, மாணவியர்கள் , சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டத்தை இந்தியா முழுவதும் மேற்கொண்டனர். இதன் காராணமாக பாலியல் கொடுமையில் ஈடுபட்ட அந்த ஆறு காம கொடுரன்களை போலீசார் விரைவில் கைது செய்தனர்.மேலும் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க அனைத்து தரப்பினரும் போர்க்கொடி  தூக்கியதை அடுத்து, மத்திய அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது.

மேல்சிகிச்சைக்கு சிங்கப்பூருக்கு பயணம் :

கடந்த 10 நாட்களாக டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி மேல் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் சிங்கபூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் இன்று காலை அவரது உயிர்
இம்மன்னுலகை விட்டு பிரிந்தது.

தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு :

மருத்துவ மாணவி இறந்ததை அடுத்து மாணவர்கள் வன்முறையில் இறங்குவதை தடுக்க டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இறந்த மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்கு பிறகு இந்தியா கொண்டுவர இந்திய தூதரகத்தினர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Delhi Rape Victim Dies in Singapore Hospital

A 23 year old girl, who put up a brave battle for life after she was gang-raped and brutally assaulted in a Delhi bus on December 16 that had created a nationwide outrage.She was died on Saturday morning in a hospital here.

by Swathi   on 28 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.