டெல்லியில் ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டகாரர்கள் டெல்லி காவல்துறை கமிஷனர் நீரஜ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.ராஜினாமா செய்ய மறுத்த கமிசனர் நீரஜ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், எனது ராஜினாமா சமுதாயத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த உதவுமானால், நான் ஆயிரம் முறை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால், இதனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்தார்.மேலும், சிறுமி கற்பழிப்பு சம்பவம் உளவியல் சம்பந்தப்பட்டது என்றும், யாரும் ராஜினாமா செய்வதால் இதற்கு தீர்வு ஏற்படப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.
|