காதல் கோட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தேவயானி. ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி, சினிமாவில் மார்கெட் குறைந்ததும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார் அங்கும் முன்னணி நடிகையானார்.
ஒரு கட்டத்தில் சின்னத்திரையை விட்டு விலகினார். இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இரண்டு பெண் குழந்தைகள். தற்போது அசோக் நகரில் ரிக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை கட்டி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் டீச்சராக வேலைக்கு போய்க்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியியதாவது, இப்பவும் நிறைய சீரியல் வாய்ப்புகளும், சினிமா வாய்ப்புகளும் வருகிறது. ஒரே மாதிரியாக நடிப்பது பிடிக்கவில்லை. அதோடு வாழ்நாள் முழுவதையும் பணம் சம்பாதிப்பதற்காகவே செலவிட முடியாது. ஏதாவது வித்தியாசமான செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மற்றவங்களுக்கு உதவுற ஒரு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன்.
சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடிச்சது டீச்சர் வேலை. அதனால் ஒரு டீச்சர் டிரைய்னிங் கோர்ஸ் படிச்சேன். அந்த கோர்சை முடிக்கிறது ஏதாவது ஒரு ஸ்கூல்ல ஆறு மாசம் ஒர்க் பண்ணி ப்ராஜக்ட் பண்ணனும்.
என் பிள்ளைகள் படிக்கிற சர்ச் பார்க் கான்வென்ட்டை செலக்ட் பண்ணினேன். அவுங்களும் சந்தோஷமா ஒத்துக்கிட்டாங்க. ப்ராஜக்டை முடிச்சேன். அதற்கு பிறகு அந்த ஸ்கூல்ல வேலை பார்த்த ஒரு டீச்சருக்கு கல்யாணம், அவுங்க வேலையை பண்ண முடியுமான்னு கேட்டாங்க. சந்தோஷமா ஒத்துக்கிட்டேன்.
என் கண்காணிப்புல 45 குழந்தைகள் படிக்கிறாங்க. தினமும் அவுங்க முகத்தை பார்க்குறப்போ ஒரு புது உத்வேகம் பிறக்கிறது. சம்பளமெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதுல சந்தோஷமும், நிம்மதியும் நிறைஞ்சிருக்கு என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் தேவயாணி.
|