அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலை உயர்வு பார்லிமென்ட் கூட்டத்திற்கு பிறகு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது, தற்போது உள்ள சூழ்நிலையில், டீசல் விலை குறைந்த பட்சம் ரூ.5 ஆவது உயர்த்தப்பட வேண்டும். இதனிடையே, டீசல் விலை உயர்வு தொடர்பாக, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மத்திய அமைச்சரவையை விரைவில் அணுகும் என அவர் தெரிவித்தார்.
|