கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவனுக்கு மும்பையைச் சேர்ந்த ஏசியாட்டிக் சங்கம் தங்கப்பதக்க விருதை அறிவித்துள்ளது. ஐராவதம் மகாதேவனின் சிந்து கல்வெட்டு ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் வகையில் 2010-12-ஆம் ஆண்டுக்கான "கேம்பெல் நினைவு தங்கப் பதக்க' விருதை ஏசியாட்டிக் சங்கம் அளிக்க உள்ளது. விருது தொடர்பான அறிவிப்பை அந்தச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜி.காலே வெளியிட்டுள்ளார். மும்பையில் இந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் ஏசியாட்டிக் சங்கத்தின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் ஐராவதம் மகாதேவனுக்கு இந்த விருது வழங்கப்படும்.
இதுவரை வரலாற்றாசிரியர்களுக்கு அளிக்கப்படும் இந்தப்பரிசை பெரும் முதன் தமிழர் திரு.மகாதேவன். அவரது தமிழ் ஆய்வுக்காக கொடுக்கப்படுகின்றது.
|