ஆடுகளம் படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் இணையும் படம் சூதாடி.
இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்குவதாக இருந்தது. ஆனால், தனுஷ் தற்போது, அனேகன், ஷமிதாப் போன்ற படங்களில் நடித்து வருவதால், சூதாடி படத்தின் படபிடிப்பு துவங்குவதில் சற்று காலதாமதம் ஆகியுள்ளது.
இந்த சிறிய இடைவெளிக்கும் ஒரு படத்தை இயக்கி விடலாம் என முடிவு செய்த இயக்குனர் வெற்றிமாறன். தற்போது அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளாராம்.
'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் இந்த படத்திற்கு விசாரணை என பெயர் வைத்துள்ளார்களாம். இப்படம் இரண்டு மணி நேரப் படமாக இல்லாமல். ஹாலிவுட் படங்களை விடவும் குறைவான நேரம் கொண்டதாக, அதாவது ஒரு மணி நேரம் மட்டும் ஓடும் படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் தினேஷ்க்கு ஜோடியாக பொறியாளன் படத்தின் நாயகி ஆனந்தி நடிக்கிறார். தனுஷ் தனது வொன்டர்பார் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.
|