|
|||||
இயக்குனர் சேரன் மகள் காதல் விவகாரத்தில் இணையதள ஜீவிகளின் கண்டனக் கருத்துக்கள் நியாயமா? |
|||||
இயக்குனர் சேரன் மகள் காதல் விவகாரத்தில் இணையதள ஜீவிகளின் கண்டனக் கருத்துக்கள் நியாயமா? -இலக்கியன்
இயக்குனர் சேரன் அவர்களின் மகள் காதல் விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கிறது. பலர் காதலை வாழ்த்தி படம் எடுத்த சேரன் இப்படி செய்யலாமா? படத்தில் மட்டும்தான் அவரின் காதல் வசனங்களா? சொந்த வாழ்க்கையில் சராசரி மனிதன்தானா? என்பதுபோன்ற பல விமர்சனக் கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ளார்கள். இப்படிப்பட்ட விமர்சகர்கள் இந்த நிகழ்வை அடுத்தவர் வாழ்க்கையாகப் பார்க்கிரார்களே தவிர கல்லூரியில் படிக்கும் தன் மகளுக்கோ, தங்கைக்கோ இந்த நிலை வந்திருந்தாள் இதே அளவுகோலை பயன்படுத்துவார்களா?
காரணம், இன்று சில கும்பல் வசதி படைத்த குடும்பங்களை குறிவைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் காதல் மற்றும் திருமண உறவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதுவும் பிரபலங்களின் குடும்பங்களை குறிவைப்பது சாதாரணமாகிவிட்டது. இதை இயக்குனர் சேரன் மற்றும் அவரின் மகள் பேச்சுக்களை முழுமையாக ஆராந்தவர்களுக்கு நன்கு புரியும்.
ஒரு பெண் இன்னும் படிப்பை முடிக்காத நிலையில், படிப்பின் ஆரம்பத்திலேயே காதல் வலையில் விழுந்து கல்வி கற்காமல் போனால் அதை ஒரு தகப்பனாக மகளின் எதிர்காலத்தில் அக்கறையுள்ள பெற்றோராக அதை புரியவைக்க இயக்குனர் சேரன் எடுத்த நடவடிக்கைகள் ஒரு முன் உதாரணமாகும்.
ஒரு பெண், படிப்பை முடிக்காமல், வேலை இல்லாமல் திரியும் ஒரு பையனுடன் காதல் வலையில் விழுந்துவிட்டேன், படிப்பு தேவையில்லை, இன்றே காதலனுடன் சேர்த்து வையுங்கள் என்று சொல்லும்போது நாம் ஒவ்வொருவரும் ஒரு பெற்றோராக எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வோம் என்பதை அடுத்தவர் வீட்டு குடும்பம்தானே என்று பார்க்காமல் நம் வீட்டு பிரச்சினையாக கருதி பார்க்கும்போது இதன் உண்மை நிலை விளங்கும். இது வலுவான காதலாக இருக்குமானால், சேரன் அவர் பெண்ணுக்கு இரவோடு இரவாக திருமணம் பேசினால் அந்தப் பெண் எதிர்ப்பை தெரிவித்து காதலனுடன் சேர முடிவெடுக்கலாம். அப்படி எதுவும் இங்கே நடக்கவில்லையே. படிப்பை முடிக்கச் சொல்லி அவகாசம் கொடுத்தும், அந்தப் பையனை ஒரு நல்ல வேலையைத் தேடு பிறகு பேசலாம் என்று சொன்னதிலும் என்ன குற்றம் இருக்கிறது? அந்தப் பெண்ணால் படிப்பைகூட தொடரமுடியாமல் காதலனுடன் சுற்றவேண்டும், பேசமால் இருக்க முடியவில்லை என்ற நிலையில் அது இனக்கவர்ச்சியைத் தவிர எப்படி உண்மையான காதலாக இருக்க முடியும்?
இனக்கவர்ச்சி மீறிய பக்குவப்பட்ட உள்ளத்தால் ஒன்றிய காதலர்கள் பலர் தன் பெற்றோரை கண்ணீர் சிந்த விடாமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுத்து கல்வியை முடித்து, இருவரும் ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொண்டு ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்த குறைந்தபட்ச வருமானம் தேடிக்கொண்டு தானே திருமணம் செய்து வெற்றியடைகிறார்கள். இருவரும் சொந்தக் காலில் நிற்க தயார்படுத்திக்கொண்ட பிறகு வரட்டு கவுரவத்திற்காக, ஜாதிக்காக சேர்த்து வைக்கத் தயங்கும் பெற்றோர்களை காயப்படுத்தாமல் எதிர்ப்பது ஒன்றும் தவறில்லை.
இன்று வெளிநாட்டு வாழ் இந்தியர்களை குறிவைத்து, சினிமாக் காரர்களை குறிவைத்து, வசதி படைத்தவர்களை குறிவைத்து ஒரு சில கும்பல் செயல்படுகிறது. இது பையனை வைத்து என்றில்லாமல் பெண்ணை வைத்தும் திருமணம் ஆனவுடன் பல ஆதாரங்களை திரட்டிக்கொண்டு பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதும், சொத்துக்களை பிடுங்குவதும் மிக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இவர்களின் இலக்கில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் வருவதில்லை ஏனெனில் அவர்களிடம் இருக்கும் உயிர் பயம்தான். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கிய பல நடுத்தரக் குடும்பங்கள் மரியாதைக்கு பயந்து வெளியில் சொல்லாமல் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு வெளிவருகிறார்கள். இதில் நமக்குப்போய் இப்படி நடந்துவிட்டதே, வெளியில் சொன்னால் வெட்கம் என்று கருதி உயிர் விட்ட பல குடும்பங்களின் கதைகள் வெளியில் வருவதில்லை.
ஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ ஒரு நல்ல கல்வியை, நல்ல எதிகாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அந்தப் பெற்றோரின் கடமை. அதே சமயத்தில் படிக்கும்போது, வேலையில்லாதபோது இழுத்துக்கொண்டு ஓடிபோய் திருமணம் செய்வதும், மேஜர் என்ற காரணத்தைக் காட்டி பெற்றோரை இப்படி கொடூரமாக குற்றம் சாட்டி அவர்களை உயிரோடு ரணப்படுத்துவும், பெற்றோருக்கு குழந்தைகள் செய்யும் துரோகம் என்பதை உணரவேண்டும். அவர்களின் காதல் உண்மையான காதலாக இருக்கும்பட்சத்தில் பெற்றோரை புரியவைத்து, தான் ஒரு நல்லவனை அல்லது நல்லவளைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன், உங்கள் உதவி இல்லாமால், உங்கள் பணம், புகழ் இல்லாமல் எங்களால் வாழமுடியும் என்று உணர்த்த முடியாத இவர்கள் எப்படி மூளை வளர்ச்சி பெற்ற பக்குவப்பட்ட காதலர்களாக இருக்க முடியும்?. பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, படிப்பை முடித்து ஒரு வேலைக்கு சென்று, பெற்றோர் பார்க்கும் திருமண பந்தங்களை மன வலிமையுடன் எதிர்த்து கடைசிவரை போராடி திருமணம் செய்து கடைசியில் பெற்றோரின் உதவியில்லாமல் வாழ்க்கையில் முன்னேறி கரம் பிடித்து வாழ்ந்துவரும் எத்துனையோ காதலர்கள், தன் பெற்றோரையும் ஏமாற்றாமல்,காட்டிக்கொடுக்காமல் காதலையும் விட்டுக்கொடுக்காமல், இனக்கவர்ச்சிக்கு அப்பாற்பட்டு வெற்றிகரமாக வாழ்வதை இன்றைய கல்லூரி, பள்ளி காதலர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த வயதில் இது உடல் சம்பத்தப் பட்டக் கோளாறு அதில் சிக்கி வாழ்க்கையை இழக்காமல் இருப்பது முக்கியமானதாகும்.
நம் முன்னோர் சொன்னதைப்போல் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், இந்த தொண்ணுறு நாட்களைத் தாண்டி காதல் வாழ்க்கையானாலும் சரி , பெற்றோர் பார்த்து வைக்கும் வாழ்க்கையானாலும் சரி ஒருவித கவர்ச்சி முடிந்து , அடுத்தக் கட்டத்திற்கு வாழ்க்கை நகரும். அப்போதுதான் உண்மையான காதல் ,நாடகக் காதல் எவை என்பது விளங்கும். இந்த தொண்ணுறு நாட்களுக்குப் பிறகு அனைவரும் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வீட்டு வாடகை முதல், மாற்றுதுணி, புட்டிப்பால் வாங்கப் பணம் என்ற சக்கரத்தில் சிக்கி விடைகான முயலும்போது தன் படிப்பும், சுய வேலையும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்வது எவ்வளவு சிரமம் என்பது புலப்படும். தான் செய்த தவறுகளும் கண்முன் தோன்றும். அதற்குள் நம்மை உருவாக்கிய பலர் நம் காதல் ஏற்படுத்திய ரணத்தில் சிக்கி நோய்வாய்ப்பட்டிருப்ப்பர் அல்லது இந்த உலகைவிட்டே போயிருப்பார்கள். அப்போதுதான் இப்படிப்பட்ட இனக்கவர்ச்சி காதல்கள் நசுங்கி நடுத்தெருவிற்கு வருகிறது.
இன்றைய தொழில் நுட்ப வசதி பெருகிய காலத்தில், பேஸ்புக், செல்போன் காலத்தில், பள்ளிகளும் கல்லூரிகளும் இப்படிப்பட்ட பிரச்சினைகளை உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு புரியவைக்க முயற்சிக்கவேண்டும். இதற்கு குறும்படங்கள் மற்றும் சில புதிய உத்திகளை கையாளலாம். இந்த முயற்சி படித்து முடித்து தனக்கென வேலையைத் தேடிக்கொண்டு சொந்தக்காலில் நின்றபிறகு மணம் முடித்து வாழ்வதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.
இதற்கு என்ன செய்யலாம்?
காணொளிகள்: http://www.youtube.com/watch?v=QENuiLnzjqk http://www.youtube.com/watch?v=dVBhWI2jz9E http://www.youtube.com/watch?v=RSXcwG4LQ0o http://www.youtube.com/watch?v=gbjWcWPyBsM
|
|||||
by Swathi on 05 Aug 2013 3 Comments | |||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|