LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காய்ச்சலுக்கு தாமாக மருந்து வாங்கி பயன்படுத்தக் கூடாது: சுகாதாரச் செயலாளர் அறிவுரை!

காய்ச்சலுக்கு தாமாகவே மருந்து வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என சுகாதாரச் செயலாளர் கூறியுள்ளார்.

 தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலால் உயிரிழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழும்பூர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் விளக்கினார். 

அப்போது அவர் கூறியதாவது: 

உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனினும், வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புற பகுதிகளை மக்கள் சுத்தம் சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். 

கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு காய்ச்சல் பரவுதல் பன்மடங்கு குறைவாக இருந்தாலும், அக்டோபர் 1ம் தேதி முதல் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சியில் டெங்கு காய்ச்சல் தாக்கம் உள்ளது. நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உருவாகின்றன. டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

காய்ச்சலுக்கு தாமாக மருந்து வாங்கி பயன்படுத்தக் கூடாது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். டெங்குவைக் கண்டுபிடிக்கும் எலிசா பரிசோதனை வசதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது. பொதுமக்கள் அடிக்கடி கை கழுவினால் நோய் பரவாது. 

முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். காய்ச்சல் வந்த 48 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. 

மேலும் ஒன்றரை லட்சம் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படும். பெரிய கட்டிடங்களில் மொட்டை மாடிகளில் கழிவுகளை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 63 பேர் டெங்குவால் இறந்தனர். 

இந்த நிலையில், பன்றிக் காய்ச்சலால் தினமும் சராசரியாக 5 பேர் பாதிக்கப்படுகின்றனர். பன்றிக்காய்ச்சல் குறையும்போது தான் பின்விளைவுகள் ஏற்படும். மருத்துவர்களின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

by Mani Bharathi   on 22 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.