|
|||||
உங்கள் முகத்தில் பருக்கள் இருக்கிறதா? நீங்கள் செய்ய வேண்டியவை !! செய்யக்கூடாதவை !! |
|||||
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் முகப்பருவும் ஒன்று. இன்றைய இளைய தலைமுறையினரின் பெரும்பாலானோரின் முகத்தில் முகப்பரு அதிகமாக இருக்கிறது. பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்ற இயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. முகப்பரு உள்ளவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செயக்கூடாதவை பற்றி இங்கு காண்போம்.
செய்ய வேண்டியவை :
தண்ணீர் அதிகமாக குடிக்கவும்
அதிக தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறும். இதனால் சருமம் பாதிப்படைவதையும், முகப்பருக்கள் வருவதையும் தடுக்கலாம்.
முகத்தை அடிக்கடி கழுவவும்
பருக்கள் அதிகம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை கழுவினால் தான், முகத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய்கள் போன்றவை வெளியேறி, பருக்கள் குறையும்.
மேக்-கப் பிரஷ்களை சுத்தம் செய்யவும்
எப்போதும் அழகு சாதன பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தூசியுடன் இருக்கும் பிரஷ்களை முகத்தில் பயன்படுத்தினால், அதில் உள்ள பாக்டீரியாக்கள், பருக்களை உடைய வைக்கும். எனவே எப்போதும் முகத்தில் பயன்படுத்தும் மேக்-கப் பிரஷ்களை நீரில் அலசி, காய வைத்து, பின்னரே முகத்தில் பயன்படுத்த வேண்டும்.
தூங்கும்போது மேக்-அப் கூடாது
தூங்க செல்லும் போது முகத்தில் உள்ள மேக்-கப்பை நீக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
செய்ய கூடாதவை :
பருக்களை கிள்ளக்கூடாது
சிலர் பருக்களை கிள்ளினால் சீக்கிரம் போய்விடும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவாறு செய்யக்கூடாது, ஏனெனில் பருக்களை கிள்ளினால், அவை அந்த நேரத்தில் போய்விடும். ஆனால் அவை கரும்புள்ளிகளாக மாறிவிடுவதோடு, கிள்ளும் போது அதிலிருக்கும் நீர்மம் சருமத்தில் பரவி பருக்கள் அதிகரிக்கும்.
பருக்களை தொடக்கூடாது
பருக்கள் உங்கள் முகத்தில் இருந்தால், முகத்தை அடிக்கடி தொடக்கூடாது. அவ்வாறு தொட்டால், கைகளில் உள்ள அழுக்களினாலேயே அவை பெரிதாகிவிடுவதோடு, உடைந்து பரவ ஆரம்பிக்கவும் செய்யும்.
எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும்
பருக்கள் உள்ளவர்கள் எண்ணெய் உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. இதனால் பருக்கள் மறைக்கப்படுவதோடு, அவை வருவதும் தடுக்கப்படும்.
முடியை விரித்து போடாதீர்கள்
பெண்களோ, ஆண்களோ முடியை முகத்தில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முடியில் உள்ள எண்ணெயால் பருக்கள் அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது.
இரவில் அதிக நேரம் விழித்திருக்க கூடாது
தூக்கமின்மையும் சருமத்தை பாதிக்கும். எனவே எப்போதும் அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில், நன்கு தூங்க வேண்டும். இதனால் முகம் பொலிவு பெறுவதோடு, பருக்கள் இன்றியும் இருக்கும். |
|||||
by Swathi on 30 Oct 2013 5 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|