மதிப்பெண் சான்றிதல்களை லேமினேட் செய்ய வேண்டாம் என தேர்வுத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்வு துறை இயக்குனர், தேவராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களின் சான்றிதழை பாதுகாப்பதாக கருதி, 'லேமினேட்' செய்வதாக, தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.
சான்றிதழை, 'லேமினேட்' செய்தால், அது பழுதாகும். மதிப்பெண் சான்றிதழில், பெயர் திருத்தம், பிறந்த தேதியில் திருத்தம் என, தெரிய வரும்போது, சான்றிதழில் திருத்தம் செய்வது கடினம்.
மாணவர்கள், வெளிநாடு செல்ல முயன்றால், அவர்களின் சான்றிதழ் பின் பக்கத்தில், அரசு முத்திரை இட வேண்டும். இதற்காக, 'லேமினேட்'டை பிரிக்கும்போது, சான்றிதழ் சேதமாகும்.
எனவே, சான்றிதழ்களை, 'லேமினேட்' செய்ய வேண்டாம் என, மாணவர்களை, தேர்வுத் துறை கேட்டுக் கொள்கிறது என தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|