|
|||||
மருமகளுக்கு சிறுநீரக தானம் செய்த மாமியாருக்கு குவியும் பாராட்டுகள்! |
|||||
மருமகளுக்கு சிறுநீரக தானம் செய்த மாமியாருக்கு குவியும் பாராட்டுகள்!
----
ராஜஸ்தானில் மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்த மாமியாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் சுற்றுலா நகரம் ஜெய்சல்மார். இதைப் பார்க்க ஏராளமானவர்கள் தினந்தோறும் இந்த நகருக்கு வருவது உண்டு. இங்குள்ள மக்களின் விருந்தோம்பலும் பிரசித்திப் பெற்றது.
இந்த நகரில் வசிப்பவர் சோனிகா (வயது 32). இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவி (60) யுடன் வசித்து வந்தார். சோனிகா, கடும் இடுப்பு வலி மற்றும் கீழ் வயிற்று வலியினால் அவதிக்கு உள்ளானார்.
அவரைப் பரிசோதித்து பார்த்ததில், சிறுநீரகங்கள் செயலிழந்து இருந்தது தெரியவந்தது. இதனால் ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக, வலி மிகுந்த டயாலிசிஸ் முறையை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், உடனடியாக சோனிகாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால், சோனிகாவின் ரத்த வகையைச் சேர்ந்த சிறுநீரகத்தை அவரது உறவினர்களிடம் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சோனிகாவின் பெற்றோர், சகோதரரின் சிறுநீரகம் அதே ரத்த வகையை கொண்டதாக இருந்தது. ஆனால், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயந்து தங்கள் சிறுநீரகத்தை சோனிகாவுக்கு கொடுக்க மறுத்துவிட்டனர்.
நாளுக்கு நாள் சோனிகாவின் நிலைமை மோசமாகி வந்த நிலையில், அவரது மாமியார் கனிதேவி, தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார்.
உடனடியாக அவரது ரத்த வகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருமகள், மாமியாரின் குணத்தை போன்றே அவர்களது ரத்த வகையும் ஒத்துப்போனது.
இதையடுத்து, கனிதேவியின் ஒரு சிறுநீரகம் எடுக்கப்பட்டு சோனிகாவுக்கு பொருத்தப்பட்டது. தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.
இதுபற்றி மிகவும் மனம்நெகிழ்ந்து கூறிய சோனிகா, ‘‘என் மாமியாருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன், அவர் எனக்கு புது வாழ்வை அளித்துள்ளார்’’ என்றார்.
மருமகளுக்கு சிறுநீரக தானம் செய்த மாமியாருக்கு அங்கே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ராஜஸ்தானில் மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்த மாமியாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதனால், சோனிகாவின் ரத்த வகையைச் சேர்ந்த சிறுநீரகத்தை அவரது உறவினர்களிடம் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சோனிகாவின் பெற்றோர், சகோதரரின் சிறுநீரகம் அதே ரத்த வகையை கொண்டதாக இருந்தது. ஆனால், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயந்து தங்கள் சிறுநீரகத்தை சோனிகாவுக்கு கொடுக்க மறுத்துவிட்டனர். நாளுக்கு நாள் சோனிகாவின் நிலைமை மோசமாகி வந்த நிலையில், அவரது மாமியார் கனிதேவி, தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார். உடனடியாக அவரது ரத்த வகை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருமகள், மாமியாரின் குணத்தை போன்றே அவர்களது ரத்த வகையும் ஒத்துப்போனது. இதையடுத்து, கனிதேவியின் ஒரு சிறுநீரகம் எடுக்கப்பட்டு சோனிகாவுக்கு பொருத்தப்பட்டது. தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இதுபற்றி மிகவும் மனம்நெகிழ்ந்து கூறிய சோனிகா, ‘‘என் மாமியாருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன், அவர் எனக்கு புது வாழ்வை அளித்துள்ளார்’’ என்றார்.மருமகளுக்கு சிறுநீரக தானம் செய்த மாமியாருக்கு அங்கே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
|
|||||
by Mani Bharathi on 08 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|