LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பாரதிதாசன் கவிதைகள்

திராவிட நாட்டுப்பண்

வாழ்க வாழ்கவே

வளமார் எமது திராவிட நாடு

வாழ்க வாழ்கவே!


சூழும் தென்கடல் ஆடும் குமரி

தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்

ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்

அறிவும் திறலும் செறிந்த நாடு.

வாழ்க வாழ்கவே...


பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த

பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்

கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்

கமழக் கலைகள் சிறந்த நாடு.

வாழ்க வாழ்கவே...


அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும் 

அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு

வெள்ளப் புனலும் ஊழித் தீயும்

வேகச் சீறும் மறவர்கள் நாடு.

வாழ்க வாழ்கவே...


அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்

அழகாய் முத்துக் குவியும் கடல்கள்

முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய் 

முல்லைக் காடு மணக்கும் நாடு.

வாழ்க வாழ்கவே...


அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்

அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்

சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.

வாழ்க வாழ்கவே...


ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின் 

சாற்றில் தென்றல் காற்றில் நல்ல

ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்

அழகில் கற்பில் உயர்ந்த நாடு.

வாழ்க வாழ்கவே...


புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப்

பொன்னார் இழையும் துகிலும் பூண்டு

கனிமொழி பேசி இல்லறம் நாடும்

காதல் மாதர் மகிழுறும் நாடு.

வாழ்க வாழ்கவே...


திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க

தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க

இங்குத் திராவிடர் வாழ்க மிகவே

இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு.

வாழ்க வாழ்கவே...

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.