தினமும் நான்கு கோப்பை தேனீர்(Tea) அல்லது காபி(Coffee) குடிப்போருக்கு, ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக ஏற்படுவதாக, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்விற்கு 16 முதல் 95 வயது உடைய, சுமார் 1.77 லட்சம் பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களை ஆராய்ச்சியாளர்கள் மூன்று குழுக்களாக பிரித்தனர். அதாவது, தேனீர் குடிக்காதவர்கள் ஒரு குழுவாகவும், 4 அல்லது 5 கோப்பை காபி அல்லது தேனீர் அருந்துபவர்கள் இரண்டாவது குழுவாகவும், கணக்கே இல்லாமல் தேனீர் குடிப்பவர்கள் மூன்றாவது குழுவாகவும் பிரிக்கப்பட்டனர். அவர்களிடம் கேள்வி பதில் முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவின் படி, கணக்கே இல்லாமல் காபி, தேனீர் குடிப்பவர்களுக்கு லேசான ரத்த அழுத்தம் இருந்தது. ஆனால், அதை முற்றிலும் தவிர்த்தவருக்கோ, அதிகப்படியான ரத்த அழுத்தம் இருந்தது. அதே நேரத்தில், நான்கு கோப்பை பருகுபவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படவில்லை. மேலும் தேனீரை பருகும்போது அது, நம் ரத்தத்தில் கலப்பதால், மனிதர்கள் மிகவும் உற்சாக மனநிலையில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|