தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வாரம் சென்னையில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முறையான உரிமம் பெறாத 103 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் சீல் வைத்து மூடப்பட்டன. இதற்கு கண்டம் தெரிவித்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மினரல் வாட்டர் தயாரிப்பாளர்கள் தண்ணீர் சப்ளையில் ஈடுபடவில்லை. இதனால் இந்த மூன்று மாவட்டங்களிலும் மினரல் வாட்டர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. குடிநீர் தட்டுபாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில வியாபாரிகள் ஒரு கேன் மினரல் வாட்டரை 100 வரை விற்பனை செய்கின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் வரும் 20–ந்தேதி முதல் கேன் தண்ணீர் தயாரிக்கும் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட உள்ளதாக கேன் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
|