|
||||||||
ஈஸி கோபி மஞ்சூரியன் (easy gobi manchurian) |
||||||||
தேவையானவை: காலிஃபிளவர் - 1 பெரியது வெங்காயம் - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்- 1/4டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை: 1.முதலில் காலிஃபிளவரை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 2.ஒரு கடாயில் அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். 3.எண்ணெய் காய்ந்ததும் அதில் வெட்டி வைத்துள்ள காலிஃபிளவர்துண்டங்களைப் போடவும். மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.. 4.அதன் பின் அத்துடன் தக்காளி சாஸை சேர்க்கவும்.சாஸ் காலிஃபிளவர் உடன் நன்றாக சேருமாறு கலந்துவிட்டு வேகவிடவும். 5.பிரித்து வைத்துள்ள வெங்காயத்தை ஒரு சிறிய கடாயில் மீதம் உள்ள எண்ணெய்யை ஊற்றி வதக்கவும். 6.ஒரு நிமிடம் வதங்கிய பிறகு அதை காளி ஃபிளவர் கலவையுடன் சேர்க்கவும் பின்னர் கொத்தமல்லி தூவவும் 7.இப்பொழுது சுவையான ஈஸி கோபி மஞ்சுரியன் ரெடி. |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|