LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: கோதுமை, பருப்பிற்கு விலையை மத்திய அரசு உயர்த்தியது!

விவசாயிகள்  நடத்திய போராட்டம் எதிரொலியாக  கோதுமை, பருப்பு வகைகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

உத்தரகாண்ட் ஹிரித்துவாரில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். ஏறக்குறைய 10 நாட்கள் பயணம் செய்த விவசாயிகள், காசியாபாத் வந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். டெல்லிக்குச் செல்ல அனுமதியளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.
விவசாயிகள் தரப்பில் எம்.எஸ் சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலான டிராக்டரை தடை செய்யக்கூடாது, அனைத்து விதமான பயிர்களையும் ஒரேமாதிரியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
 நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எளிமையாக இருக்கும் வகையில் காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினார்கள்.
டெல்லி செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து, கண்டனம் தெரிவித்தனர்.
இநத ்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக,  பிரதமர் மோடி தலைமையில்  மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
 நடப்பு ராபி பருவத்தில் கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 அதிகரிக்கப்பட்டு, ரூ.1,840 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சப்பிளவர் குவிண்டால் ஒன்றுக்கு 845 ரூபாயும், கடுகு மற்றும் ராப்சீடுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 200 ரூபாயும்  உயர்த்தப்பட்டுள்ளது. பார்லி குவிண்டால் ஒன்றுக்கு 30 ரூபாயும், மசூர் 225 ரூபாயும், பருப்பு 220 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதலாகக் கிடைக்கும்.

விவசாயிகள்  நடத்திய போராட்டம் எதிரொலியாக  கோதுமை, பருப்பு வகைகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

உத்தரகாண்ட் ஹிரித்துவாரில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். ஏறக்குறைய 10 நாட்கள் பயணம் செய்த விவசாயிகள், காசியாபாத் வந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். டெல்லிக்குச் செல்ல அனுமதியளிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.

விவசாயிகள் தரப்பில் எம்.எஸ் சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலான டிராக்டரை தடை செய்யக்கூடாது, அனைத்து விதமான பயிர்களையும் ஒரேமாதிரியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.

 நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எளிமையாக இருக்கும் வகையில் காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினார்கள்.

டெல்லி செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து, கண்டனம் தெரிவித்தனர்.

இநத ்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக,  பிரதமர் மோடி தலைமையில்  மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

 நடப்பு ராபி பருவத்தில் கோதுமைக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105 அதிகரிக்கப்பட்டு, ரூ.1,840 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சப்பிளவர் குவிண்டால் ஒன்றுக்கு 845 ரூபாயும், கடுகு மற்றும் ராப்சீடுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 200 ரூபாயும்  உயர்த்தப்பட்டுள்ளது. பார்லி குவிண்டால் ஒன்றுக்கு 30 ரூபாயும், மசூர் 225 ரூபாயும், பருப்பு 220 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதலாகக் கிடைக்கும்.

by Mani Bharathi   on 04 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.