ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - மக்கள் எக்குற்றஞ் செய்யினும் பொறுத்துக் கொள்ளும் மட்டற்ற அன்புள்ள தாய் முன்பும் கள்ளுண்டு வெறித்தல் துன்பந் தருவதாம்;மற்றுச் சான்றோர் முகத்து என்- பின்பு ; எக்குற்றமும் பொறாத அறிவுடையோர் முன் அது எத்தகையதாம்? ஐம்புலனு மடங்கி அடியோடு உணர்விழத்தலும், வாய்காவாது மறைவெளிப்படுத்தலும் பித்தர்போற் பிதற்றலும்,ஆடை விலகலும் அற்றம் மறையாமையும், தீநாற்றம் வீசுதலும், வாய் நுரைதள்ளுதலும், வழியிற் கிடத்தலும் வழிப்போக்கர் பழித்தலும், ஈமொய்த்தலும், இளஞ்சிறார் சிரித்தலும், கண்ணாரக்காணின் , பெற்றதாயும் பொறாது கண்டனஞ் செய்வளாதலின், கள்ளக் கண்ணாலுங் காணப் பொறாது நெடுந்தொலைவில் நீங்கும் தூயவொழுக்கமுள்ள சான்றோர்க்கு, அக்காட்சி அளவிறந்த அருவருப்பையும் வெறுப்பையும் விளைக்கும் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை யென்பதாம்.உம்மை உயர்வு சிறப்பு.'மற்று' பின்மைப் பொருளது. 'ஆல்' அசைநிலை.
கலைஞர் உரை:
கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?.
Translation
The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?.
Explanation
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.
Transliteration
Eendraal Mukaththeyum Innaadhaal Enmatruch
Chaandror Mukaththuk Kali
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்