எகிப்து நாட்டின் இடைக்கால துணை அதிபராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எல்பராடி நியமிக்கப்பட்டுள்ளார். எகிப்து நாட்டில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோஸ்னி முபாரக் என்ற சர்வாதிகாரி ஆட்சி செய்து வந்தார். கடந்த 2011 ம் ஆண்டு மிகப் பெரிய மக்கள் புரட்சி ஏற்பட்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இதனை அடுத்து எதிர் கட்சியை சேர்ந்த முகமது முர்சி, அதிபராக பொறுப்பேற்றார். முகமது முர்சி பதவி ஏற்று ஓராண்டாகியும், நாட்டின் நிலை சீரடையாததால், மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை சீர் செய்ய ராணுவ புரட்சி ஏற்பட்டு அவரும் தற்போது பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். புதிய அதிபராக முன்னாள் தலைமை நீதிபதி மன்சூர் பொறுப்பேற்றுள்ளார். புதிய பிரதமராக பெல்லாவி நியமிக்கப்பட்டுள்ளார். எகிப்து நாட்டில் ஜனநாயகம் கோரி போராடியவர்களில் முகமது எல்பராடியும் ஒருவர் . எல்பராடி, எகிப்து இடைக்கால துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்க உள்ளதாக, அதிபர் மன்சூர் தெரிவித்துள்ளார். கடந்த, 2005ம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு, எல்பராடிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|