சியாட்டல் : சியாட்டல் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஜூன் 21-ம் தேதி சனிக்கிழமை மாலை , திரு சகா நாதனின் எட்டாவது புத்தகமான “Relationship solutions -A Spiritual way “ , Bellevue Eastside Bahai Center , அரங்கில் நடைப்பெற்றது. Groupon நிறுவனத்தின் தலைவரான திரு கல். இராமன் நூலை வெளியிட திரு லேனா தமிழ் வாணன் அவர்கள் பெற்று கொண்டார்.
இரண்டு மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியில் முதலாவதாக சியாட்டல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு இராமு ஜெயகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றினர். . இருபத்தி ஐயிந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்திற்கும் தமிழ் சங்கத்தின் , சிறப்புகளையும், நிகழ்வுகளையும் எடுத்து உரைத்த அவர் , மேலும் வாஷிங்டன் மாநிலத்தின் தமிழ் மற்றும் தமிழர்களின் ஆற்றல்களை ஊக்குவிக்கும் வகையில் திரு .சகா நாதனின் நூல் வெளியீட்டு விழா அமைவதாக, மகிழ்ச்சி தெரிவித்தார். நூலை வெளியிடுகையில் , Groupon திரு கல். இராமன் “சகா நாதன் தனது நூலில் குறிப்பிட்டு இருக்கும் “பிரச்சனைக்களுக்குக்கான தீர்வுகள் அனைத்து வயதினரும் எற்று செயல்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது என்று தெரிவித்தார் நூலில் இருந்து சில தகவல்களை பகிர்ந்து கொண்ட திரு இராமன் அவர்கள் திரு சகா அவர்களின் ஆன்மீக தீர்வுகள் இன்றைய சூழலில் அனைவருக்கும் பொதுவானது என்று உரைத்தார் . சிறப்பு அழைப்பாளாராக இந்தியாவில் இருந்து வந்திருந்த எழுத்து செல்வர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் , தனது சீடரின் எட்டாவது நூல் , "அமைதியான வாழ்க்கைக்கு ஆதாரம் தியானமும் யோகாவும்" என்று சொல்லியிருப்பது , படிப்பவர்களை ஒரு சுயபரிசோதனை செய்ய தூண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் தனது சீடர் சகா நாதனின் வேண்டுகோளை ஏற்று, “வாழ வழி காட்டும் இலக்கிய செல்வங்கள்” என்ற தலைப்பின் கீழ் சிறு உரை அளித்தார் நிறைவாக பேசிய திரு சகா நாதன் அவர்கள் , சிறப்பு விருந்தினர் கல் இராமன் அவர்களையும் , திரு லேனா தமிழ் வாணன் அவர்களையும் வாழ்த்தி நன்றி தெரிவித்தார் , மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் newbeginningnow.com, அதற்கு உறுதுணையாக இருந்த சியாட்டல் தமிழ்ச்சங்கத்திற்க்கும் ,விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கும் , தனது நன்றியை தெரிவித்தார் உடல் உறுதியோடு மன அமைதியை உறுதி செய்வதே , நாம் அனைவரும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ வழி வகுக்கும் என்று கூறிய திரு சகா நாதன் தனது வாழ்வின் முக்கிய நோக்கமே தன்னை சுற்றியிருக்கும் அனைவரும் அவ்வண்ணம் வாழுவதே! என்று தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியை , சியாட்டல் தமிழ் சங்கத்தின் துணை பொருளாளரும் , குறிஞ்சி மின்னிதழின் ஆசிரியையுமான திருமதி குணமொழி ஹரி சங்கர் தொகுத்து வழங்கினார் .விழாவில் கலந்து கொண்ட சுமார் இருநூறு நண்பர்களுக்கு , பெல்லிவியூவில் இருந்து செயல்ப்படும் உணவகங்கள் Bavarchi, Currypoint, Mayuri இரவு விருந்து அளித்தனர்
|