LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

எட்டாம் திருமுறை-24

 

24.அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம்
(திருப்பெருந்துறையில் அருளியது) 
கலவைப் பாட்டு
செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த 
பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன் 
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா 
அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408
வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற் 
பொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்க கங்கைசடைக் 
செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர் 
அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409
பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் 
தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே 
வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற 
அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புaணைகொண் 
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் 
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய 
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411
சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு 
இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்திடங்கண் 
வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான் 
அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 412
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து 
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் 
வாழியெப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வலவினையேன் 
ஆழியப் பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. 413
மின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப் 
புன்கணனாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி 
என்கணிலே அமுதூற்றித்தித் தித்தென் பிழைக்கிரங்கும் 
அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 414
மாவடு வகிரன்ன கண்ணியங் காநின் மலரடிக்கே 
கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய் நின் குறிப்பறியேன் 
பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்த உள்ளம் 
ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 415
பிறிவறியார் அன்பாநின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ் 
மறிவறியாச் செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர் 
நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் 
அறிவறி஧ன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 416
வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு 
விழுங்குகின்றேன்விக்கி஧ன் வினையேன் என்விதியின்மையால் 
தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய் 
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 417
திருச்சிற்றம்பலம்

 

24.அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம்

(திருப்பெருந்துறையில் அருளியது) 

கலவைப் பாட்டு

 

 

செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த 

பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன் 

புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா 

அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408

 

வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற் 

பொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்க கங்கைசடைக் 

செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர் 

அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409

 

பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் 

தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே 

வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற 

அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410

 

பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புaணைகொண் 

டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் 

சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய 

அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411

 

சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு 

இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்திடங்கண் 

வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான் 

அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 412

 

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து 

தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் 

வாழியெப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வலவினையேன் 

ஆழியப் பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. 413

 

மின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப் 

புன்கணனாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி 

என்கணிலே அமுதூற்றித்தித் தித்தென் பிழைக்கிரங்கும் 

அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 414

 

மாவடு வகிரன்ன கண்ணியங் காநின் மலரடிக்கே 

கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய் நின் குறிப்பறியேன் 

பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்த உள்ளம் 

ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 415

 

பிறிவறியார் அன்பாநின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ் 

மறிவறியாச் செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர் 

நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் 

அறிவறி஧ன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 416

 

வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு 

விழுங்குகின்றேன்விக்கி஧ன் வினையேன் என்விதியின்மையால் 

தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய் 

அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 417

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 25 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.