LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

எட்டாம் திருமுறை-44

 

44.எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை
(தில்லையில் அருளியது) 
எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்
பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் 
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல் 
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே 
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599
உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும் 
தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற் 
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப் 
பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே. 600
என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி 
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவர் முனிவர் முழுமுதலே 
இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே 
நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே 601
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப் 
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே 
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று 
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602
காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப் 
பேணும தொழிந்தேன் பிதற்றம தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே 
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால் 
காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே. 603
பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு எதிர்த்து 
தோற்றிமெய் யடியார்க் கருட்டுரை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன் 
போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே 
ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே. 604
திருச்சிற்றம்பலம்

 

44.எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை

(தில்லையில் அருளியது) 

எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்

 

 

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் 

சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல் 

ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே 

ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599

 

உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும் 

தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற் 

பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப் 

பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே. 600

 

என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி 

முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவர் முனிவர் முழுமுதலே 

இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே 

நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே 601

 

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப் 

பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே 

முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று 

எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602

 

காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப் 

பேணும தொழிந்தேன் பிதற்றம தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே 

தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால் 

காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே. 603

 

பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு எதிர்த்து 

தோற்றிமெய் யடியார்க் கருட்டுரை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன் 

போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே 

ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே. 604

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 25 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.