வரும் 16ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையாற்ற வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் பின் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க முடியும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. . தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்கள் விவரம் வருமாறு :
1. கடவுச்சீட்டு (பாஸ் போட்)
2. ஒட்டுநர் உரிமம்
3. மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்)
4. வங்கி/ அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது)
5. நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு)
6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;
7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை
8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
9. புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம்
10. தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு
11. பாராளமன்ற., சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.
இந்த ஆவணங்களில் ஏதேனும் வாக்காளர்கள் காண்பித்து தங்களின் வாக்குகளை பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் வாக்காளர் அடையாள அட்டையில், எழுத்துப்பிழை, அச்சுப்பிழை இருந்தால், அதை தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் பொருட்படுத்தக் கூடாது; ஓட்டுச்சாவடியில் குறிப்பிட்ட வாக்காளரின் பெயர் இருக்கும்போது, மாற்று தொகுதியில் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தால், அதையும் ஏற்க வேண்டும்; புகைப்படம் மாறி இருந்தால் மட்டுமே நிராகரிக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
|