LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு வேகம்: முறைகேட்டை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிரம்

 'ஆதார்' அடையாள அட்டை, சட்டப்படி செல்லும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில், தேர்தல் கமிஷன் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. 

மத்திய அரசின் திட்டப்படி, குழந்தை முதல் முதியோர் வரை, தனி நபர் ஒவ்வொருவருக்கும், ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 125 கோடி பேருக்கு, ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

அரசின் சில சலுகைத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்களின் கீழ் பயன் பெற, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டதால், தேவையற்ற  மானிய சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளதாக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து தேர்தல் முதல், லோக்சபா தேர்தல் வரை, தேர்தல் கமிஷனால் நடத்தப்படும் தேர்தல்களில், போலி வாக்காளர்கள் ஓட்ட ளிப்பதை தடுக்க, பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. 

மொத்தம், 75 கோடி வாக்காளர்கள் உள்ள நம் நாட்டில், 2015 வரை, 38 கோடி வாக்காளர் அடையாள அட்டையுடன், அவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. ஆதாருக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில்  வழக்குகள் நிலுவை யில் இருந்ததால், அந்த பணி அப்போது நிறுத்தப் பட்டது.

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பின் அவசியம் குறித்து, 2017-ல், தேர்தல் கமிஷன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஆதார் எண்ணை, எதற்கு பயன் படுத்தலாம், எதற்கு பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து, சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஆதார் எண், சட்ட ரீதியில் செல்லும் என தெரிவித்தது.

இதையடுத்து, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மீண்டும் தொடர, தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. இதை கட்டாயம் என்ற வகையில் செய்யாமல், வாக்காளர்களின் விருப்பத்தின் படி, இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

இது குறித்து, சட்டவல்லுனர்களுடன், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

by Mani Bharathi   on 29 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.