குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை திருப்பூர் மாநகராட்சி அமல் படுத்த முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில். தினமும் 520 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. இதில், காகிதம் 42.9 டன், ரப்பர் மற்றும் தோல் பிளாஸ்டிக் 40.98 டன், கண்ணாடி 5.72 டன், உலோகங்கள் 2.60 டன், மக்கக்கூடிய பொருட்கள் 243.72 டன், கட்டட இடிமான பொருட் கள் 184.08 டன் குப்பைகள் கிடைக்கின்றன.
தற்போது மாநகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததால் சேகரிக்கப்படும் குப்பைகளை பயன்பாடற்ற பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.அதனால், தினமும் ஐந்து டன் குப்பையில் இருந்து, எரிவாயு தயார் செய்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் தோரயமாக 90 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் இதன் மூலம் ஒரு லட்சத்து 68 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய திருப்பூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மேலும் இதன் மூலம் ஆண்டுக்கு 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் திருப்பூர் மாநகராட்சி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|