இங்கு எமதர்மன் மூவலராக அருள்பாலிக்கிறார்.இக்கோயிலில் எமதர்மன் தனிக்கோயில் மூர்த்தியாக, முறுக்கிய மீசையுடன் எருமை மீது அமர்ந்த
கோலத்தில் இருக்கிறார்.நீல நிற வஸ்திரம் அணிந்தபடி காட்சி தரும் இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி
மற்றும் கதை வைத்திருக்கிறார். இவருக்கு கீழே சித்திரகுப்தனும், எமதூதரும் இருக்கின்றனர். இவருக்கு பச்சரிசி சாதம் மற்றும் கனிகள் நைவேத்யம்
படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.அருகில் பாம்பாட்டி சித்தர், பூரணா, புஷ்கலாவுடன் அய்யனார் ஆகியோரும் இருக்கின்றனர். ஆடி மாதத்தில்
நடக்கும் விழாவின்போது, பத்து நாளும் இவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவர் வேட்டைக்கு செல்வதாக ஐதீகம்.
எமன், தர்மத்தின் வடிவமாக இருப்பவர். சிறிதாக தவறு செய்தாலும், அவர்களை உடனே தண்டித்துவிடுவார். எனவே, இக்கோயில் வளாகத்தில் உள்ள
தீர்த்தத்தில் பெண்கள் நீராடுவதில்லை. அறியாமல் தவறு செய்துவிட்டாலும், எமதர்மனின் கோபப்பார்வைக்கு ஆளாக வேண்டும் என்ற பயத்தில்
நீராடுவதில்லை என்கிறார்கள்.
இங்கு எமதர்மன் மூவலராக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் எமதர்மன் தனிக்கோயில் மூர்த்தியாக, முறுக்கிய மீசையுடன் எருமை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். நீல நிற வஸ்திரம் அணிந்தபடி காட்சி தரும் இவர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதை வைத்திருக்கிறார். இவருக்கு கீழே சித்திரகுப்தனும், எமதூதரும் இருக்கின்றனர்.
இவருக்கு பச்சரிசி சாதம் மற்றும் கனிகள் நைவேத்யம் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. அருகில் பாம்பாட்டி சித்தர், பூரணா, புஷ்கலாவுடன் அய்யனார் ஆகியோரும் இருக்கின்றனர். ஆடி மாதத்தில் நடக்கும் விழாவின்போது, பத்து நாளும் இவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவர் வேட்டைக்கு செல்வதாக ஐதீகம். எமன், தர்மத்தின் வடிவமாக இருப்பவர்.
சிறிதாக தவறு செய்தாலும், அவர்களை உடனே தண்டித்துவிடுவார். எனவே, இக்கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தத்தில் பெண்கள் நீராடுவதில்லை. அறியாமல் தவறு செய்துவிட்டாலும், எமதர்மனின் கோபப்பார்வைக்கு ஆளாக வேண்டும் என்ற பயத்தில் நீராடுவதில்லை என்கிறார்கள். |