LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மெகா திட்டம் தயாரிப்பு!

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மெகா திட்டம் தயாரிக்கப் பட்டு உள்ளது.

தமிழகத்தின் பூம்புகார் உட்பட, நாட்டின் கடலோர பகுதிகளில், 14 வேலைவாய்ப்பு மண்டலங்களை உருவாக்கும், மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் திட்டத்துக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் மூலம், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில், நாடு முழுவதும், 14 மெகா வேலைவாய்ப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.

 மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் இந்த திட்டத்துக்கு, அரசுக்கு திட்டங்கள் உருவாக்கலில் ஆலோசனை வழங்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்'கின், திட்ட ஆய்வு, மேலாண்மை பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என தெரிகிறது.

நிடி ஆயோக் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்த திட்டம் குறித்து, அமைச்சரவை குழு பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து உருவாக்கப்படும் வேலை வாய்ப்பு மண்டலங்களில், தொழிற்சாலைகளை அமைக்கும்படி, நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இது குறித்து, அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில், வேலை வாய்ப்பு மண்டலங்களைஉருவாக்குவதில், பிரதமர் அலுவலகம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இவற்றின் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என, பிரதமர் அலுவலகம் கூறி வருகிறது.  அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன், வேலைவாய்ப்பு மண்டலங்கள் குறித்து  இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. 

தொழிற்சாலைகள், அவை உருவாக்கும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அடிப்படையில், நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத சலுகைகள் வழங்கப்படும். தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, ஒற்றைச் சாளர முறையில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த திட்டப்படி, 14 மெகா வேலைவாய்ப்பு மண்டலங்கள், நாட்டின் கடலோர மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த மண்டலங்களில், சிமெண்ட், உணவுப் பொருள், மரப்பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆடைகள், தோல் பொருள், ஆபரண கற்கள், நகைகள் தயாரிப்பு உள்ளிட்ட, 35 தொழிற்சாலைகளின் தொகுப்பு இடம்பெறும்.

வேலைவாய்ப்பு மண்டலங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என, முதல் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த தொகையை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலவிடும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில், குறைந்தபட்சம், 2,000 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்.துறைமுகம் சார்ந்த தொழில் மயமாக்கல் அடிப்படையில், வேலை வாய்ப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.

 இதன் மூலம், 'இந்தியாவில் தயாரியுங்கள்' பிரசாரத்துக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கவும், துறைமுகம் சார்ந்த தொழில் நடவடிக்கைகளில், இந்தியாவை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார், வி.சி.ஐ.சி., எனப்படும், விசாகப்பட்டினம் - சென்னை தொழில் பாதை, ராமேஸ்வரம், குஜராத்தில் கட்ச், சூர்யபூர், சவுராஷ்டிரா, கேரளாவில் மலபார் உட்பட, 14 வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன.

 இவ்வாறு அவர் கூறினார்.

 மெகா வேலைவாய்ப்பு திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், உற்பத்தி களங்கள் அமைக்க, தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்

by Mani Bharathi   on 16 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.