LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

என் முகமாய் நானிருப்பேன்

என்முகத்தை   நானேயேன்   மாற்ற  வேண்டும்

எல்லோர்க்கும்   ஏற்றபடி   மாறு  யென்றே

என்னிடத்தில்   ஏன்இவர்கள்   சொல்ல  வேண்டும்

எதற்காக   சமரசம்நான்   செய்ய   வேண்டும்

என்சுயத்தை   யாருக்காய்   இழக்க   வேண்டும்

என்வழியை   யாருக்காய்   மாற்ற  வேண்டும்

என்கொள்கை   என்குறிக்கோள்   அடைவ  தற்கே

எவர்தடையாய்   நின்றாலும்   தகர்த்த   ழிப்பேன் !


ஊருடனே   ஒத்துப்போ   என்று   ரைப்பார்

ஊர்செய்யும்   தவறுகளுக்   கிசைவ   தோநான்

சேறுதனைச்   சந்தனந்தான்   பூசி   டென்றே

செப்பிடுவோர்   கூற்றுதனை   ஏற்ப   தோநான்

நாருதனில்   மலர்கோர்த்த   லின்றிச்   சுற்றி

நறுங்கழுத்தை   இறுக்குவோரைப்   போற்ற   வோநான்

ஏறுபோல    தீமைகளை  எதிர்த்தி    டாமல்

எச்சில்நாய்   போலிருக்க   முடியா   தென்னால் !


குற்றத்தைக்    குற்றமெனச்   சொல்ல   அஞ்சிக்

குற்றேவல்   புரிவதற்கா   வாழ்வைப்   பெற்றேன்

வெற்றுக்கே    வாழ்வதினால்    பயன்தான்   என்னே

வெறும்வயிற்றை   நிரப்புதற்கா   இந்த   வாழ்வு

சிற்றெறும்பும்    கடித்தபின்பே    உயிர்து   றக்கும்

சிறுபுலியும்   சினந்தெழுந்தால்   யானை   ஓடும்

பெற்றயென்றன்    தமிழைநாட்டை    உயர்த்தும்   போரில்

பெறுகின்ற   விழுப்புண்ணே   என்னைக்   காட்டும் !


பாவலர் கருமலைத்தமிழாழன்

by Swathi   on 18 Oct 2014  0 Comments
Tags: Mugam   Mugam Kavithai   Mugam Tamil Kavithai   Karumalai Thamilaalan   முகம்   என் முகம்   முகம் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்.... அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....
மகளின்  மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் மகளின் மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்
உண்மைத் தமிழனாய் உயர்வானோ! உண்மைத் தமிழனாய் உயர்வானோ!
தமிழ்   ஒரு   பூக்காடு தமிழ் ஒரு பூக்காடு
எங்கே  போயிற்று   எங்கள்   கிராமம் எங்கே போயிற்று எங்கள் கிராமம்
இணையத்தில்   இன்பத்தமிழ் இணையத்தில் இன்பத்தமிழ்
சிறப்பாக   நடிக்கின்ற   நடிக   ரானோம் ! சிறப்பாக நடிக்கின்ற நடிக ரானோம் !
வானம்  உன்  கைகளுக்குள் வானம் உன் கைகளுக்குள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.