|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 1 - பகுதி 1 குறளோடு உறவாடு– அஷ்ராஃப் குன்ஹூனு - பிற மொழிகளில் திருக்குறள் |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – அஷ்ராஃப் குன்ஹூனு அறிமுகம்: திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்களின் தாய்மொழி மலையாளம் ஆகும். பிறந்து வளர்ந்தது அனைத்தும் திருச்சியிலே. கால்நடை மருத்துவம் பயின்றிருக்கிறார். தன்னுடைய 37 வயதுவரை திருக்குறள் மீது அனைவருக்கும் பொதுவாக இருக்கும் ஆர்வமே இவருக்கும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். பிடித்த குறள்: திருக்குறளை ஏன் திருக்குரானுக்கு ஈடாக வைத்துப் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் இவருக்குத் தோன்றியது. அறநெறி வாழ்வியலுக்கு ஊன்றுகோல் ‘திருக்குறள்’ என நினைத்தார். இவருக்கு பிடித்தமான குறள் என்று கேட்கும் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறள் பிடிப்பதாகக் கூறுகிறார். ‘நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்று நிலை’ என்ற குறள் தற்போது மிக பிடித்தமான குறள் என்று கூறுகிறார். மேலும் இவருக்கு பிடித்தமான அதிகாரம் என்று கூறும் போது ‘கண்ணோட்டம்’ என்ற அதிகாரம் இவருக்கு எப்போதும் பிடித்தமான அதிகாரம் என்று குறிப்பிடுகிறார். இந்த அதிகாரத்தில் கூறப்பட்ட குறட்பாக்கள் அனைத்தும் எல்லா நாட்டவர்க்கும் எக்காலத்திற்கும் பொருந்தியவை. உளவியல் நோக்கில் படைக்கப்பட்டவை எனவும் திரு. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் கூறினார். திருக்குறளில் எண்களின் அதிசயம்: ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப..’ என்றார் திருவள்ளுவர். திருக்குறளில் எண்களின் அதிசயத்தைக் காண முடியுமா எனத் திரு அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் விழைந்தார். தொடர் முயற்சியின் பலனாகத் திருக்குறளில் எண்களின் அதிசயத்தையும் கண்டறிந்தார். திருக்குறளில் ஒரே சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் ஆய்வு மேற்கொண்டார். எந்த எண் திருக்குறளில் சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது என்பதிலும் கவனம் கொண்டார். அவற்றைக் கண்டும் பிடித்தார். தென்காசி திருக்குறள் கழகம்: திருக்குறளில் இவ்வாறாகக் கணித ஆராய்ச்சியை மேற்கொண்ட போதே அதன் நீதிக் கருத்துக்களின் மேல் ஆர்வம் கொண்டார். 1927ல் தொடங்கப்பட்ட தென்காசி திருக்குறள் கழகத்தில் முதன்முதலில் ‘பவர் பாயின்ட்’ மூலமாக ஆய்வினை சமர்ப்பித்தார். இவர் திருக்குறளைப் பெரும்பான்மையான மொழிகளில் தட்டச்சு செய்து வெளியிட இவருடைய குடும்ப உறவினர்களும் உதவியதாகக் குறிப்பிடுகிறார். இவர் திருக்குறளுக்கு ஆற்றிய இந்த பணியானது மிகப்பெரும் சேவையாகப் போற்றப்படுகிறது. |
|||||
by Lakshmi G on 04 Oct 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|