|
||||||
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது என்ன சத்தம் இந்த நேரம் !! |
||||||
ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் நடித்ததன் மூலம் என்ன சத்தம் இந்த நேரம் படம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
அலையன்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், குருரமேஷ் இயக்கத்தில், இயக்குனர் ஜெயம் ராஜா ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் ‘என்ன சத்தம் இந்த நேரம்’. இந்தப் படம் சாதாரணமாக வீட்டில் ஒரு குழந்தை வைத்திருக்கிறவர்களே அந்த குழந்தையை வளர்ப்பதற்கு எவ்வளவு போராடுவார்கள்... அதே குடும்பத்தில் இரட்டை குழந்தைகளோ, இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளோ இருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்,அவர்கள் தினமும் சந்திக்கிற நிகழ்வுகள்தான் இந்த படத்தின் கதை. அதுவும் ஒரே நாளில் காலையில் தொடங்கி மாலையில் முடிகிற சம்பவங்கள்தான் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படம்.
படத்தின் சிறப்பம்சமே ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் நடித்திருப்பதுதான். இந்த குழந்தைகளின் அப்பாவாகதான் இயக்குனர் ஜெயம்ராஜா நடித்திருக்கிறார்.ஆரம்பத்தில் நடிப்பதற்கு அணுகியபோது நடிக்க விருப்பம் இல்லை என மறுத்து விட்டார். பின்னர் கதையை கேட்டதும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். கதைப்படி ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை தேடி வந்தோம் 6 மாத தேடலுக்கு பிறகு குழந்தைகள் கிடைத்தார்கள். அவர்களை தான் நடிக்க வைத்திருக்கிறோம்.
உலக சினிமா வரலாற்றில் இதுபோன்று ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் ஒரு படத்தில் இணைந்து நடித்ததில்லை. இந்த பெருமையை இந்த படம்தான் பெற்றிருக்கிறது. இந்தியாவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்திய சினிமாவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரே படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்தான்’. |
||||||
by Swathi on 05 Dec 2013 0 Comments | ||||||
Tags: லிம்கா லிம்கா சாதனை புத்தகம் என்ன சத்தம் இந்த நேரம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் Enna Satham Indha Neram Limca Book Limca Records | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|