LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

என்னவைத்தோம்

முன்னோர்கள்   தூய்மையாக   வைத்தி   ருந்த

மூச்சிழுக்கும்    காற்றினிலே   நஞ்சை   சேர்த்தோம்

முன்நின்று   காற்றிலுள்ள   அசுத்தம்    நீக்கும்

முதலுதவி   மரங்களினை    வெட்டிச்   சாய்த்தோம்

பொன்கதிரை   வடிகட்டி   ஒளிய   னுப்பும்

பொற்கவச    ஓசோனை   ஓட்டை   செய்தோம்

என்னவைத்தோம்   சந்ததிக்கே   தன்ன   லத்தால்

எல்லாமும்   கலப்படத்தால்   கெடுத்து   வைத்தோம் !

 

ஆயிரமாம்   ஆண்டுகளாய்    சேர்த்து   வைத்த

அடிநீரைக்   குழாய்வழியே   காலி   செய்தோம்

பாய்மரம்போய்   கடல்நீரில்   எண்ணெய்   குண்டால்

பரிதவிக்க   மீன்களினைச்   சாக   டித்தோம்

தாய்மண்ணில்   உரங்களினைப்    போட்டுப்   போட்டுத்

தரும்விளைச்சல்   எனஉறிஞ்சி   சக்கை   செய்தோம்

சேய்களுக்கே   என்னவைத்தோம்   தன்ன   லத்தால்

செழித்திருந்த   இயற்கையினைக்    கெடுத்து   வைத்தோம் !

 

அறிவியலால்    அணுக்குண்டை   வெடிக்க   வைத்தே

அழிவிற்கே   அறிவென்று   பயிற்று   வித்தோம்

நெறிகளினைக்   குழிதோண்டிப்   புதைத்து    விட்டு

நியாயத்தை   அதர்மத்தில்   அடக்கி   வைத்தோம்

வெறியூட்டி   சாதிமதம்    பெருக்கு   வித்தே

விளைந்திருந்த    மனிதநேயம்    கருக   வைத்தோம்

குறிக்கோளாய்    இளைஞருக்கே   என்ன   வைத்தோம்

குற்றுயிராய்   வாழ்க்கையினை   விட்டு   வைத்தோம் !

 

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

by Swathi   on 18 Oct 2014  0 Comments
Tags: Thooimai Kavithai   Karumalai Thamilaalan   கருமலைத்தமிழாழன்              
 தொடர்புடையவை-Related Articles
மூளியாக்கி வைத்தோம்!- பாவலர்  கருமலைத்தமிழாழன் மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்
ஊனமாகி  வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன் ஊனமாகி வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன்
மகளின்  மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் மகளின் மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்
வருமோ  இப்புதிய   உலகு.. வருமோ இப்புதிய உலகு..
உண்மைத் தமிழனாய் உயர்வானோ! உண்மைத் தமிழனாய் உயர்வானோ!
தமிழ்   ஒரு   பூக்காடு தமிழ் ஒரு பூக்காடு
எங்கே  போயிற்று   எங்கள்   கிராமம் எங்கே போயிற்று எங்கள் கிராமம்
இணையத்தில்   இன்பத்தமிழ் இணையத்தில் இன்பத்தமிழ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.