திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - பகைவீர்,இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின் - நீவிர் அதன்கணின்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். ('என் ஐ' எனத் தன்னோடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல். 'நம்பன் சிலை வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை',(சீவக.காந்தர்வ.317) என, பதுமுகன் கூறினாற் போல ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி'.
மணக்குடவர் உரை:
என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு. இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நிலை மக்கள் சால உடைத்து எனினும்-போரிற் பின்வாங்காது நிலைத்து நிற்கும் மறவரை மிகுதியாகக் கொண்டிருப்பினும்; தலைமக்கள் இல்வழித்தானை இல்-தனக்குத் தலைவராகியவயவர் (வீரர்) இல்லாவிடத்துப் படை நிற்காது. படையைப் பயிற்றவும் போருக்கு நடத்திச் செல்லவும் போர்க்களத்தில் ஏவிப் போர் செய்விக்கவும், தலைவர் இன்றியமையாமையால், 'தலைமக்க ளில்வழி யில்' என்றார். இதனால், படைத்தலைவரின் தனிச்சிறப்புக் கூறப்பட்டது. தலைவனில்லாப்படை தலையில்லாவுடம்பு போன்ற தென்பது கருத்து.
கலைஞர் உரை:
போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.
Translation
Ye foes! stand not before my lord! for many a one
Who did my lord withstand, now stands in stone!.
Explanation
O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.