|
|||||
பாகிஸ்தானை விட்டு வெளியேற முஷாரப்புக்கு தடை ! |
|||||
கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், ராணுவ புரட்சி மூலம் நாவாஸ் ஷெரீப்பின் அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றினார். முஷாரப்பின் ஆட்சி
காலத்தில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, அவர் மீது தேச துரோக புகார் கூறப்பட்டது. இதையடுத்து 2008ல், தான் வகித்த அதிபர் பதவியை
ராஜினாமா செய்த முஷாரப் நாட்டை விட்டு வெளியேறி துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே வரும், மே 11ல் பாகிஸ்தானில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், "அனைத்து
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி' சார்பாக, நான்கு தொகுதிகளில் போட்டியிட அவர் முடிவு செய்தார். முஷாரப்பின் வேட்புமனு சித்ரால் தொகுதியில் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முஷாரப்
மீதான தேச துரோக புகார் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.நீதிமன்றத்தில் முஷாரப் இன்று ஆஜராக வேண்டும்,என சம்மன் அனுப்பிய
நீதிபதிகள், அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளனர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், ராணுவ புரட்சி மூலம் நாவாஸ் ஷெரீப்பின் அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றினார். முஷாரப்பின் ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, அவர் மீது தேச துரோக புகார் கூறப்பட்டது. இதையடுத்து 2008ல், தான் வகித்த அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப் நாட்டை விட்டு வெளியேறி துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே வரும், மே 11ல் பாகிஸ்தானில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி' சார்பாக, நான்கு தொகுதிகளில் போட்டியிட அவர் முடிவு செய்தார். முஷாரப்பின் வேட்புமனு சித்ரால் தொகுதியில் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முஷாரப் மீதான தேச துரோக புகார் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.நீதிமன்றத்தில் முஷாரப் இன்று ஆஜராக வேண்டும்,என சம்மன் அனுப்பிய நீதிபதிகள், அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளனர்.
|
|||||
by Swathi on 09 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|