LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் நடை பெற போகும் இரண்டாவது சுதந்திர போர் - ஈரோடு குழந்தைகள் அடிக்கல் நாட்டினர் !

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி ஈரோட்டில் குழந்தைகள் மற்றும் சமூக நல அமைப்புகள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். 

 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் குக்கூ குழந்தை வெளி அமைப்பை சேர்ந்த சுமார் 200 குழந்தைகளும், பாட்டாளி படிப்பகம், கலைத்தாய் அறக்கட்டளை, நீர்த்துளிகள் சமூக நல அமைப்பை சேர்ந்த பல்வேறு மாணவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தியவாதி சசி பெருமாள் காலை 9.30 மணி அளவில் தொடங்கி வைத்தார். 

 

தமிழகத்தில் நடைபெறும் இரண்டாவது சுதந்திரபோர் :

 

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னிலை வகித்த வழக்கறிஞர் ப.பா. மோகன் பேசியதாவது, மதுவிலக்கு வேண்டி எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் , குழந்தைகளின் இந்த உண்ணாவிரத போராட்டம், தமிழகத்தில் நடைபெறும் இரண்டாம் சுதந்திர போராட்டம் போன்றது, எந்த ஒரு பிரச்சனையையும் வெற்றிகரமாக முடிக்கும் திறமை இன்றைய குழந்தைகளிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

மது குடிக்கும் தந்தையால் தன்னுடைய மகளுக்கே பாதுகாப்பில்லை :

 

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நீர்த்துளிகள் சமூக நல அமைப்பின் பெண் நிர்வாகி பேசியதாவது, இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டின் கலாச்சாரம் மதுவால் பெரும் பாதிப்படைந்துள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்றால் உடனடியாக மது கடைகளை இழுத்து மூட வேண்டும். மேலும் நம்  நாட்டில் மது குடிக்கும் தந்தையால் தன்னுடைய சொந்த மகளுக்கே பாதுகாப்பில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார்.

 

குழந்தைகளின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் வைகோ :

 

குழந்தைகளின் உண்ணாவிரத போராட்டத்தை தமிழகம் முழுவதும் மது ஒழிப்பிற்காக நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொது செயலாளர் வைகோ மாலை 6.00 மணி அளவில் குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுத்து முடித்துவைத்தார்.

by Swathi   on 29 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.