|
|||||
தமிழகத்தில் நடை பெற போகும் இரண்டாவது சுதந்திர போர் - ஈரோடு குழந்தைகள் அடிக்கல் நாட்டினர் ! |
|||||
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி ஈரோட்டில் குழந்தைகள் மற்றும் சமூக நல அமைப்புகள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் குக்கூ குழந்தை வெளி அமைப்பை சேர்ந்த சுமார் 200 குழந்தைகளும், பாட்டாளி படிப்பகம், கலைத்தாய் அறக்கட்டளை, நீர்த்துளிகள் சமூக நல அமைப்பை சேர்ந்த பல்வேறு மாணவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தியவாதி சசி பெருமாள் காலை 9.30 மணி அளவில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் நடைபெறும் இரண்டாவது சுதந்திரபோர் :
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னிலை வகித்த வழக்கறிஞர் ப.பா. மோகன் பேசியதாவது, மதுவிலக்கு வேண்டி எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் , குழந்தைகளின் இந்த உண்ணாவிரத போராட்டம், தமிழகத்தில் நடைபெறும் இரண்டாம் சுதந்திர போராட்டம் போன்றது, எந்த ஒரு பிரச்சனையையும் வெற்றிகரமாக முடிக்கும் திறமை இன்றைய குழந்தைகளிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மது குடிக்கும் தந்தையால் தன்னுடைய மகளுக்கே பாதுகாப்பில்லை :
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நீர்த்துளிகள் சமூக நல அமைப்பின் பெண் நிர்வாகி பேசியதாவது, இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டின் கலாச்சாரம் மதுவால் பெரும் பாதிப்படைந்துள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்றால் உடனடியாக மது கடைகளை இழுத்து மூட வேண்டும். மேலும் நம் நாட்டில் மது குடிக்கும் தந்தையால் தன்னுடைய சொந்த மகளுக்கே பாதுகாப்பில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார்.
குழந்தைகளின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் வைகோ :
குழந்தைகளின் உண்ணாவிரத போராட்டத்தை தமிழகம் முழுவதும் மது ஒழிப்பிற்காக நடைபயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொது செயலாளர் வைகோ மாலை 6.00 மணி அளவில் குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுத்து முடித்துவைத்தார். |
|||||
by Swathi on 29 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|