|
|||||
ஐந்தாம் தமிழ்ச்சங்கம் - இணைய தமிழ்ச்சங்கம் மதுரையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார் |
|||||
அக்டோபர் 13, 2018: மதுரை மாநகரில் இணைய தமிழ்ச்சங்கம் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இது இணையத்தில் தமிழை வளர்க்கவும், தமிழர்களிடத்தில் இணையத்தை வளர்க்கவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர்கள் தெரிவித்தனர். இதில் திரு.சுரேஷ் சம்பந்தம் , திரு.சிவராஜா ராமநாதன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். தமிழகத்தின் பல்வேறு தொழில்துறை சார்ந்தவர்களும், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்றவர்களும் சிறப்புரை நிகழ்த்தினர். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தொழில்துறையில் வெற்றிபெறுவது எப்படி என்பது குறித்த வெற்றியாளர்களின் உரைகளை கேட்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வில் Blockchain தொழில்நுட்பம், Artificial Intelligence உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்களை குறித்த தகவல்களை துறை சார்ந்த வல்லுனர்கள் தமிழில் விளக்கி பேசினர். இதில் அமெரிக்காவிலிருந்து திரு.பிரபாகரன் முருகையா, CEO,TechFetch.Com உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை வலைத்தமிழ்.காம் அரங்கத்திலிருந்து முகநூலில் நேரலை செய்தது . இதில் பதிவுசெய்யப்பட்ட பயனுள்ள காணொளித்தொகுப்புகள்: ஐந்தாம் தமிழ்ச்சங்கம் - இணைய தமிழ்ச்சங்கம் தொடக்கவிழா மதுரையில் தொழில் தொடங்கி வெற்றிபெற என்ன திறமைகள் வேண்டும்? G Sureshkumar, CEO, Macappstudio Artificial Intelligence -எப்படி நம் வாழ்வை மாற்றுகிறது? உலகை Blockchain தொழில்நுட்பம் எப்படி மாற்றப்போகிறது? -Mr.Raguraman,Blockchain Specialist
உலகத் தமிழர்களின் நிகழ்வுகளை உடனுக்குடன் பெற வலைத்தமிழுடன் இணைந்திருங்கள் www.Facebook.com/ValaiTamil , www.YouTube.com/ValaiTamil , www.YouTube.Com/ValaiTamilTV . |
|||||
by Swathi on 17 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|