கவிமாலை சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர் இயக்கம்
DATE | TIMINGS |
---|---|
28 Apr 2024 | 06.00pm |
அன்புடையீர் வணக்கம்,
சிங்கப்பூர்த் தமிழ்மொழி விழாவினை (2024) கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் இந்த ஆண்டு 47 நிகழ்ச்சிகள்.. நிறைவு விழாவாகக் கவிமாலை நடத்தும் கவியாற்றல் 2.0 நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி 28/4/2024 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற உள்ளது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கவிதை எழுதும் போட்டிக்கான பரிசுகள், மொழிபெயர்ப்பு போட்டிக்கான பரிசுகள், தொடக்கநிலை மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டிக்கான பரிசுகள் அனைத்தும் இந்த நிகழ்வில் வழங்கப்படும்.
போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் நிகழ்விற்கு நேரில் வந்து பரிசு பெற்றவர்களின் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பாரம்பரிய நடனத்துடன் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்..
அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.