"வையத் தலைமைகொள்" - பெண் ஆளுமைகளுடன் ஒரு பயணம் - 6
என்ற வலைத்தமிழ் தொடர், உலகம் முழுதும் பல்துறை ஆளுமைகளாக , சமூகப்பொறுப்புடன் செயல்பட்டு தலைமைப்பண்புகளோடு களப்பணியில் முன் வரிசையில் நிற்கும் பெண் பேராளுமைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தி வருகிறது.
இதை பொறுப்பேற்று செய்துவரும் திருமதி.சுபா காரைக்குடி , நியூஜெர்சி மிக அருமையான , நேர்த்தியான உரையாடலை நிகழ்த்தி விருந்தினர்களை அவர்கள் அனுபவங்களுடன் நம்மையும் கரம்பிடித்து பயணிக்க வைக்கிறார்.
இத்தொடரின் 6-வது ஆளுமையாக பலதுறைகளில் ஈடுபட்டு தமிழ்ச் சமூகத்தின் ஒரு பேராளுமையாக விளங்கும், ஆஸ்திரேலியா உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் தமிழ் வளர்ச்சி மன்றம் (ஆஸ்திரேலியா) நிறுவனர் முனைவர்.சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள் அமெரிக்க கிழக்கு நேரம் வெள்ளிகிழமை மாலை 8 மணிக்கும், இந்திய நேரம் சனிக்கிழமை காலை 5:30 மணிக்கும் , ஆஸ்திரேலிய நேரம் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கும் கலந்துகொள்கிறார்.