LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபாடி: ஆசிரியர்கள் முற்றுகை!

சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். 

இதையடுத்து டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் மீது வழக்கு நடந்தது. அதனால் தேர்வு முடிவுகள் நிறுத்தி  வைக்கப்பட்டது.

  கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு  முடிவுகளை வெளியிட்டது. ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி தேர்ச்சி அடைந்திருந்த பலர் தற்போது தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், சிறப்பு ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளின்படி விளையாட்டு ஆசிரியர்கள் தேர்வில் பெரும்பாலும் ஆண்களே தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதனால் பெண் ஆசிரியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் கடந்த முறை வெளியான தேர்வு முடிவுகளின்படி தேர்ச்சி அடைந்திருந்த பலருக்கு இந்த முறை குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. பலர் தேர்ச்சி அடையவில்லை.

மேலும், ஓவியப்பாடத்துக்கான தேர்வில் பலருக்கு தகுதியிழப்பின் காரணமாக பணி நியமனம் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற காரணங்களால் அந்த ஆசிரியர்கள் தேர்வு வாரிய தலைவரை சந்தித்து விளக்கம் கேட்கவேண்டும் என்று தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். 

ஓவியம் என்ற பாடத்துக்கு தமிழ் வழியில் தேர்வு எழுத தேவையில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அளித்த அறிவிப்பை அதிகாரிகளிடம் காட்டினர். 

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஆலோசிப்பதாக தெரிவித்தனர். மேலும் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தவர்களும் விளக்கம் அளித்து பேசியதுடன் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்றும் வாதிட்டனர். அதுகுறித்தும் அதிகாரிகள் ஆலோசிப்பதாக தெரிவித்தனர். 

இதையடுத்து  மாலை வரை சிறப்பு ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

by   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.