LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ஏழாம் அறிவாய்க் காதல்

ஐந்து அறிவும் இயக்கத்தில் வீழ,

ஆறாம் அறிவு மயக்கத்தில் ஆழ,


ஏழாம் அறிவாய் இந்தக் காதல்

என்னுள் வந்ததை எப்படிச் சொல்வேன்?...


தந்தை தாயின் காதலில் பிறந்தேன்...

அந்தத் தாபமோ இந்தக் காதல்?...


விந்தும் நாதமும் சேர்ந்திடப் பிறந்தேன்...

அந்தப் பாவமோ இந்தக் காதல்?...


பருவக் காற்று மனதைச் சுழற்றும்

அருவச் சுழலோ இந்தக் காதல்?...


உருவந் தொலைத்து உயிரைக் கரைத்து

உருக்கிக் குடிக்கும் இந்தக் காதல்...


சித்தம் மொத்தம் நித்தம் முத்தம்

யுத்தம் செய்யும் இந்தக் காதல்.


ரத்தம் நித்தம் சத்தம் செய்யப்

பித்தம் செய்யும் இந்தக் காதல்


ஆசை இல்லா மாந்தர் தம்மில்

நேரக் கொடுமை இந்தக் காதல்


ஓசை இல்லா பூகம்பங்கள்

நேரக் கொடுமை செய்யும் காதல்...


இன்பம் தந்தே இம்சை செய்யும்

துன்பத் தேனாம் இந்தக் காதல்...


துன்பம் தந்தும் அன்பைச் சிந்தும்

இன்பத் தீயாம் இந்தக் காதல்...


கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும்,

உற்றே அறிய, ஐந்தே அறிவைக்,


கொண்டே மண்ணில் பிறக்கும்போதே

கொண்டேன் மனதை ஆறாம் அறிவாய்.


பாழாய்ப் போன ஆறாம் அறிவும்

பெண்ணே உன்னால் காணாதொழிய,


ஏழாம் அறிவாய் இந்தக் காதல்

என்னுள் வந்ததை எப்படிச் சொல்வேன்?...

by Rajeshkumar Jayaraman   on 01 Mar 2015  1 Comments
Tags: Ezham Arivu   Kadhal   ஏழாம் அறிவு   காதல்   Rajesh Kumar   ராஜேஷ் குமார்     
 தொடர்புடையவை-Related Articles
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
எனக்குள் நீ - கணேஷ் எனக்குள் நீ - கணேஷ்
பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன் பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன்
அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம் அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம்
சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன் சின்ன இன்ப வரி சின்ன வலி வரி - கவிப்புயல் இனியவன்
அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன் அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன்
சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன் சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன்
இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் - கவிப்புயல் இனியவன் இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
14-Nov-2016 19:44:03 சந்திர குமார் said : Report Abuse
அருமை ! அருமை !ரமேஷ் குமார் ஜெயராமன் ! உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் என்னவாக எழுத்தில் கொண்டு வந்து விட்டீர் ! வாழ்த்துக்கள் !
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.