|
|||||
பனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக சில டிப்ஸ் !! |
|||||
பொதுவாக பனிக்காலத்தில் சருமம் வறண்டு, செதில் படிந்து காணப்படும். இதனால் முகம் மற்றும் உதடு பகுதிகளில் அவலட்சணமான தோற்றம் ஏற்படும். இந்த பிரச்சனையிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாக்க இதோ சில டிப்ஸ்......
பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவு பெரும்.
பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும்.
வறண்ட சருமக்காரர்கள், பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
எல்லா வகை சருமத்தினரும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
அரை கிலோ துவரம் பருப்பு, 100 கிராம் பயத்தம் பருப்பு, 25 கிராம் கசகசா, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் இவற்றை மெல்லிதாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை தினந்தோறும் முகம் முதல் பாதம் வரை தேய்த்து குளிக்கவும். தொடர்ந்து இவ்வாறு 1 மாதம் செய்துவந்தால் தோலின் வறட்டுத்தன்மை நீங்கி மிருதுவாக ஜொலிக்கும்.
பனிக்காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
பனிக் காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிவிடும்.
மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வரவேண்டும். |
|||||
by Swathi on 03 Dec 2013 6 Comments | |||||
Tags: Dry Face Face Care Tips Winter Season பனிக்காலம் வறண்ட சருமம் சரும பிரச்சனைகள் | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|