குடும்பம் மற்றும் சொத்துப் பிரச்சனை வழக்குகளில் கைது நடவடிக்கையை தவிர்க்குமாறும், கைது செய்யப்படும் நபர் உடனடியாக ஜாமீனில் வெளி வருவதை தடுக்க வெள்ளிக்கிழமைகளில் கைது செய்யக்கூடாது என்றும் காவல்துறையை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீனை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கி உத்தரவிட்டார்.
இதுபோன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக் காட்டினார்.
குடும்பம் மற்றும் சொத்துப் பிரச்சனை போன்ற வழக்குகளில், கைது செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளி வருவதை தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
|