LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

குடும்ப அமைதிக்கு மனவளமும் - தியானமும்

 

மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை.
மனதை அடக்க நினைத்தால் அலையும். மனதை அறிய நினைத்தால் அடங்கும்.
தினந்தோறும் சமையலறையில் பாத்திரத்தை உபயோகிக்கிறோம். அதனைச் சுத்தம் செய்து வைத்தால்தானே மறுநாளைக்கு நன்றாக இருக்கும். அதுபோல் தினந்தோறும் நாம் நம்முடைய வாழ்க்கையில் மனதை அலைய விட்டுக்கொண்டு அதனால் உடலையும் இன்னும் வாழ்க்கையில் உள்ள நலன்களையும் குழப்பம் செய்துகொண்டும் குடும்பத்தில் அமைதி இழந்து வாழ்கிறோம். அதற்கு தினந்தோறும் அருட்தந்தையின் எளியமுறைதியானப்பயிற்சி மூலம் மனதைச் சுத்தப்படுத்தி மனத்தை அதன் உண்மை நிலைக்கு கொண்டு வந்து வைக்க வேண்டும்.
தியானம் – மனம் எங்கிருந்து பறப்படுகின்றதோ அது புறப்படுகின்ற இடத்திலேயே மனதைக் கொண்டு வந்து நிலைநிறுத்தப் பழகுவது என்பது தான் தியானம். உயிரினுடைய படர்க்கை நிலை மனம்.
மனம் – எண்ணம் இரண்டும் ஒன்றேதான். அகத்தவத்தால் எண்ணத்தை ஆராய்ந்தால் அங்கு உயிராக இருக்கும் அறிவை அறியலாம். அதற்கு தவப்பயிற்சி உதவும்.
இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து, விடாமுயற்சியுடன் செய்ய தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்கு படுத்திக் கொண்டு தன்னைப்பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டு பூரண நிலையைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும்.
அகத்தவத்தால் ஐம்பலனை அடக்கி அறிவறிந்திடலாம் !
அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம் !
அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம் !
அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பை பெற்றிடலாம்.
பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்க கூடிய மனத்தின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொள்ள, நல் விளக்கத்தை பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முறையான பயிற்சிதான் மனவளக்களை. அதில் உள்ள அனைத்தும் தவத்தால் மனதில் ஓர்மை, கூர்மை, நேர்மை என மாற்றப்பெறுவதால் குடும்பத்தில் அனைவரும் அமைதிகாத்து வாழ முடியும்.
                                                                     -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி 

மனம் தான் மனித வாழ்க்கையின் விளைநிலம். மனத்தின் தன்மை எதுவோ அதுதான் மனிதனுடைய தன்மை.

 

 

மனதை அடக்க நினைத்தால் அலையும். மனதை அறிய நினைத்தால் அடங்கும்.

 

 

தினந்தோறும் சமையலறையில் பாத்திரத்தை உபயோகிக்கிறோம். அதனைச் சுத்தம் செய்து வைத்தால்தானே மறுநாளைக்கு நன்றாக இருக்கும். அதுபோல் தினந்தோறும் நாம் நம்முடைய வாழ்க்கையில் மனதை அலைய விட்டுக்கொண்டு அதனால் உடலையும் இன்னும் வாழ்க்கையில் உள்ள நலன்களையும் குழப்பம் செய்துகொண்டும் குடும்பத்தில் அமைதி இழந்து வாழ்கிறோம். அதற்கு தினந்தோறும் அருட்தந்தையின் எளியமுறைதியானப்பயிற்சி மூலம் மனதைச் சுத்தப்படுத்தி மனத்தை அதன் உண்மை நிலைக்கு கொண்டு வந்து வைக்க வேண்டும்.

தியானம் – மனம் எங்கிருந்து பறப்படுகின்றதோ அது புறப்படுகின்ற இடத்திலேயே மனதைக் கொண்டு வந்து நிலைநிறுத்தப் பழகுவது என்பது தான் தியானம். உயிரினுடைய படர்க்கை நிலை மனம்.

மனம் – எண்ணம் இரண்டும் ஒன்றேதான். அகத்தவத்தால் எண்ணத்தை ஆராய்ந்தால் அங்கு உயிராக இருக்கும் அறிவை அறியலாம். அதற்கு தவப்பயிற்சி உதவும்.

 

 

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து, விடாமுயற்சியுடன் செய்ய தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்கு படுத்திக் கொண்டு தன்னைப்பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டு பூரண நிலையைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும்.

 

அகத்தவத்தால் ஐம்பலனை அடக்கி அறிவறிந்திடலாம் !

அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம் !

அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம் !

அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பை பெற்றிடலாம்.

 

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்க கூடிய மனத்தின் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொள்ள, நல் விளக்கத்தை பெற்று அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முறையான பயிற்சிதான் மனவளக்களை. அதில் உள்ள அனைத்தும் தவத்தால் மனதில் ஓர்மை, கூர்மை, நேர்மை என மாற்றப்பெறுவதால் குடும்பத்தில் அனைவரும் அமைதிகாத்து வாழ முடியும்.

                                                                     -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி 

 

by Swathi   on 18 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.